முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரக்கோணம் நீதிமன்றத்தில் வக்கீல்களுக்கு கோர்ட் டைரி

திங்கட்கிழமை, 18 டிசம்பர் 2017      வேலூர்
Image Unavailable

அரக்கோணம் நீதிமன்றத்தில் பணியாற்றிடும் வக்கில்களுக்கு வக்கில்சங்க நிர்வாகிகளால் தலாஓர் இலவசடைரி (நாட்காட்டி); வழங்கப்பட்டது இது குறித்து விவரம் வருமாறு. வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரில் விண்டர்பேட்டை பகுதி, பைபாஸ் சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைந்து உள்ளது. இந்த நீதிமன்றத்தில் அனைத்து வக்கில்களின் (பார் அசோஸியேசன்) சங்கம் செயல்படுகிறது.

இலவசடைரி

இந்த சங்கத்தின் தலைவராக வக்கீல் அரிகலபாடி ஆர்.ரவி, செயலாளராக என்.தமிழ்மாறனும், பொருளாளராக ஹரிபாபும், மற்றும் துணை தலைவராக என்.குமரகுரு, இணை செயலாளராக கே.குட்டிபாலு, நூலகராக கே.பூபதி, ஆடிட்டராக கே.முனுசாமி ஆகியோர் கொண்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இதே போல் கவுரவ உறுப்பினர்களாக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ரவி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் துணை சேர்மன் பிஎஸ்.அமல்ராஜ், சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் ஜிபி.ஆர்.பிரதாப்குமார் ஆகிருயாரும் செயல்பட்டு வருகின்றனர்

இந்த நிர்வாகத்தின் சார்பில் 2018ஆம் ஆண்டு வக்கில்டைரி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதற்கு செயலாளர் என்.தமிழ்மாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்; வக்கில்களிடம் தலைவர் ஆர்.ரவி தலாஒரு இலவச டைரிகளை வழங்கினார். இந்த நிகழ்வின்போது வக்கில்கள் ஜானகி, வினோத்குமார், பாபு, டில்லிபாபு, பிரபாகரன், ஹாருன்ரசீத், ஜெயராஜ், யுவராஜ், உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து