முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானில் தற்கொலைப்படை தாக்குதல்: 6 போலீசார் பலி

சனிக்கிழமை, 23 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் ஆறு போலீஸார் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ’ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்தில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் தாலிபன் தீவிரவாதிகள்  தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினர். இதில் ஆறு போலீஸார் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’ என்றார்.

ஆப்கானிஸ்தானில் கடந்த அக்டோபர் மாதம் ராணுவ முகாம் மீது தாலிபன்கள் நடத்திய தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 43 பேர் பலியாகினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து