முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.எஸ்.டி.யின் வரி தாக்கல் செய்வோருக்கு புது வசதிகள்

ஞாயிற்றுக்கிழமை, 24 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி :  ஜிஎஸ்டியின் கீழ் வரித் தாக்கல் செய்பவர்கள் இனி காலாண்டு முறையிலோ அல்லது மாதாந்திர முறையிலோ தாக்கல் செய்யலாம் என்று ஜி.எஸ்.டி நெட்வொர்க் தெரிவித்துள்ளது.

இந்த நிதியாண்டிலோ அல்லது கடந்த நிதியாண்டிலோ ஆண்டு மதிப்பீட்டில் ரூ.1.5 கோடிக்கும் அதிகமாக விற்றுமுதல் கொண்டு வரி செலுத்துபவர்கள் இனி மாதாந்திர அளவிலோ அல்லது காலாண்டுக்கு ஒரு முறையோ வரித் தாக்கல் செய்யலாம் என்று ஜி.எஸ்.டி நெட்வொர்க் கூறியுள்ளது.

இதுகுறித்து ஜி.எஸ்.டி நெட்வொர்க் இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்த அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியார்களிடம் பேசிய ஜி.எஸ்.டி நெட்வொர்க் தலைவர் பிரகாஷ் குமார் பயனர்கள் ஜி.எஸ்.டி போர்டலில் லாக்-இன் செய்து, GSTR-1 அல்லது GSTR-3B போன்ற ரிட்டன் படிவங்களைக் கோருவதற்கு முன் அவர்கள் பொருத்தமான வழி ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதேபோல ஜிஎஸ்டிஆர்-1ல் டேபிள் 9 என்ற வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் எடிட் இன்வாய்ஸ், கிரெடிட் நோட்ஸ், டெபிட் நோட்ஸ் மற்றும் ஷிப்பிங் பில் உள்ளிட்ட தகவல்களைச் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து