முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய பொருளாதார தடையை ஏற்க முடியாது : ஐ.நா. தீர்மானத்தை ஆதரித்த நாடுகளுக்கு வடகொரியா எச்சரிக்கை

திங்கட்கிழமை, 25 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

பியாங்யாங் : ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் விதித்துள்ள புதிய பொருளாதார தடையை ஏற்க முடியாது என்றும் இது போர் தொடுக்கும் செயல் என்றும் வடகொரியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வடகொரிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,

எங்கள் நாட்டின் பாதுகாப்புக்காகஅணு ஆயுதங்களை தயாரிக்கிறோம். இது சர்வதேச விதிமுறைக்கு எதிரானது அல்ல. ஆனால், எங்கள் நாட்டின் மீது ஐ.நா. புதிய பொருளாதார தடை விதித்துள்ளது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் காரணம். இது கொரிய தீபகற்ப பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை சீர்குலைத்து போர் தொடுக்கும் செயல் ஆகும். இதுதொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் என கூறப்பட்டுள்ளது.

வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதையடுத்து, வடகொரியா மீது ஏற்கெனவே பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. இப்போது வடகொரியா மீது புதிதாக ஒரு பொருளாதார தடை விதிக்க ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இதன்படி, வடகொரியாவுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதியை உலக நாடுகள் குறைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் தங்கள் நாட்டில் உள்ள வடகொரிய தொழிலாளர்களை அடுத்த 2 ஆண்டுகளுக்குள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து