முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஞ்சி சிறையில் லல்லுவுக்கு வீட்டுச் சாப்பாடு

திங்கட்கிழமை, 25 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

ராஞ்சி : கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள லல்லு பிரசாத் யாதவுக்கு டிவி, செய்தித்தாள், வீட்டு உணவு உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.

கடந்த 1990-ம் ஆண்டு, ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லல்லு பிரசாத் பீகார் முதல்வராக இருந்தபோது கால்நடைகளுக்கு தீவனம் வழங்கும் திட்டத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரிக்க 1996-ல் பாட்னா ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, ராஞ்சி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் லல்லு மீது மொத்தம் 5 வழக்குகள் பதிவாகி உள்ளன. ஏற்கெனவே 2013-ல் ஒரு வழக்கில் லல்லுவுக்கு சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டு தண்டனை விதித்தது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். பின்னர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், 2-வது வழக்கிலும் லல்லு குற்றவாளி என்று சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தண்டனை விவரம் வரும் ஜனவரி 3-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதையடுத்து அவர் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறை வளாகத்தில் உள்ள உயர் வகுப்பு அறையில் அடைக்கப்பட்டார். பீகார் முதல்வராகவும் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர் என்பதால் இவருக்கு வி.ஐ.பி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், மற்ற கைதிகள் யாரும் லல்லுவை சந்திக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அவர்கள் தெரிவித்தனர்.

வி.ஐ.பி அந்தஸ்து காரணமாக லல்லுவுக்கு டிவி, தினமும் செய்தித்தாள், கொசு வலை ஆகியவை வழங்கப்பட்டுள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் வீட்டு உணவை பெற்றுக் கொள்ளவும் அல்லது தானே சமைத்து சாப்பிடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து