எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் ஆகாசம்பட்டு கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் இல.சுப்பிரமணியன், தலைமையில் நடைபெற்றது.
நலத்திட்ட உதவிகள்
இம்முகாமில் கலெக்டர் இல.சுப்பிரமணியன், கலந்து கொண்டு வருவாய்த்துறையின் மூலம் இந்து-இருளர் சாதிச்சான்று 31 பயனாளிகளுக்கும், 2 பயனாளிகளுக்கு கால்நடை இறப்பு நிவாரணத் தொகையாக ரூ.33,000-மும், மாற்றுத்திறனாளி உதவித்தொகை 30 பயனாளிகளுக்கும், முதிர்கன்னி உதவித்தொகை 2 பயனாளிகளுக்கும், ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை 2 பயனாளிகளுக்கும், ஆதரவற்ற குழந்தைகள் சான்று 1 பயனாளிக்கும், காசநோயாளி உதவித்தொகை 8 பயனாளிகளுக்கும், குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) 47 பயனாளிகளுக்கும், பட்டா (உட்பிரிவு) 31 பயனாளிகளுக்கும், பட்டா (முழுபுலன்) 10 பயனாளிகளுக்கும், விதவைச்சான்று 1 பயனாளிக்கும், வாரிசுச்சான்று 1 பயனாளிக்கும், ஊரக வளர்ச்சித்துறை சார்பாக 20 பயனாளிகளுக்கு பாரத பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் ரூ.10,57,880-மும், வேளாண்மைத்துறை சார்பாக 10 பயனாளிகளுக்கு ரூ.1,09,630- மதிப்பீட்டில் விவசாயக் கருவிகளும், தோட்டக்கலைத்துறை சார்பாக 22 பயனாளிகளுக்கு ரூ.18,48,700- மதிப்பீட்டில் விதைகள் மற்றும் விவசாயக் கருவிகளும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக 1 பயனாளிக்கும் சலவைப் பெட்டி என மொத்தம் 219 பயனாளிகளுக்கு ரூ.30,49,210- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி கலெக்டர் இல.சுப்பிரமணியன், விழாவில் தலைமையுரையாற்றினார்
பொதுமக்கள் அரசு நலத்திட்ட உதவிகளை பெற நேரடியாக துறை சார்ந்த அலுவலர்களையோ அல்லது வாரந்தோறும் திங்கள் தினங்களில் நடைபெறும் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்திலோ, இதுபோன்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமிலோ மனுவாக அளித்து அரசு நலத்திட்ட உதவிகளை இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக மனுக்களை அளித்து பயன்பெறுவதே இந்த அரசின் நோக்கமாகும். மேலும், இதுபோன்ற மக்கள் தொடர்பு திட்ட முகாம்களில் பொதுமக்கள் நேரடியாக அரசு அலுவலர்களை சந்தித்து, தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெறுவதால், இடைத்தரகர்களிடமிருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்படுகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் விவசாயம் நிறைந்த பகுதியாகும். இங்கு நுண்ணீர் சொட்டு நீர் பாசம் மூலம் அதிக அளவில் விவசாயம் செய்ய, வேளாண்மை உதவி இயக்குநரை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். இவ்வருடம் 2017-18ஆம் ஆண்டு நுண்ணீர் சொட்டு நீர் பாசனம் மூலமாக 41,000 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.318 கோடி செலவில் விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு, 30,000 ஏக்கர் நிறைவுபெற்று, 10,000 ஏக்கர் பணிகள் நிலுவையில் உள்ளது. வானூர் வட்டத்தில் மட்டும் 250 ஏக்கர் நுண்ணீர் சொட்டு நீர்பாசனம் மூலம் பயிர் செய்ய குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த குறியீட்டிற்கு மேல் பயிர் செய்ய, அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க தயார் நிலையில் உள்ளது.நுண்ணீர் சொட்டுநீர் பாசனம் மூலம் பயிர் செய்ய குறு, சிறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பெருவிவசாயிகளுக்கு 70 சதவீத மானியமும் அரசு வழங்குகிறது. மேலும், வேளாண்மை பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஒரு ஏக்கருக்கு ரூ.353- காப்பீடு செய்தால், ஒரு ஏக்கர் பயிர் சேதத்திற்கு இழப்பீடாக ரூ.23,500- விவசாயிகளுக்கு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.இந்த வருடமும் நமது மாவட்டத்தில் நடப்பு காரிப் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், கம்பு, பருத்தி, மக்காச்சோளம், மணிலா மற்றும் தோட்டக்கலை பயிர்களான வாழை, மஞ்சள், மரவள்ளி மற்றும் வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு அறிவிக்கை செய்யப்பட்டுள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள் பயிர் காப்பீட்டு செய்து கொள்ளலாம். இதற்கான காப்பீட்டு கட்டணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் காப்பீட்டு முகவர்கள் மூலம் பெறப்படுகிறது. இந்த வருடம் விவசாயிகளின் நலன் கருதி தற்பொழுது அரசால் புதியதாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள பொது சேவை மையங்களை அணுகி காப்பீட்டு கட்டணம் செலுத்தி கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலர்களை அணுகுமாறு கலெக்டர் இல.சுப்பிரமணியன், விவசாய பெருமக்களை கேட்டுக்கொண்டார்.விழுப்புரம் மாவட்டத்தை திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும். எனவே உடனடியாக கழிப்பறை இல்லாதவர்கள், அப்பகுதி வட்டார வளர்ச்சி அலுவலரை நேரில் சந்தித்து, தனிநபர் கழிப்பறை கட்ட விண்ணப்பித்து அரசு வழங்கும் ரூ.12,000- நிதியுதவி பெற்று உடனடியாக தனிநபர் கழிப்பறைகளை கட்ட கேட்டுக்கொள்கிறேன். மேலும் குழந்தை திருமணத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இதற்கான உறுதிமொழியினை அனைவரும் ஏற்க வேண்டும். பெண் கல்வியை ஊக்குவிக்கும் வண்ணம் அரசு பள்ளிக்கல்வித்துறை அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது. இதனை பயன்படுத்தி அனைவரும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை ஆகிய அனைத்துத் துறைகளை ஒருங்கிணைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாக்கடைகளில் உருவாகும் கொசுக்கள் கடிப்பதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. ஒரு வாரத்திற்கு மேல் வீட்டில் தண்ணீர் தேங்க விடக்கூடாது. 10 மி.லி. தண்ணீர் இருந்தாலே ஏடிஎஸ் கொசு உருவாவதற்கு போதுமானதாகும். உரல், தேங்காய் ஓடு, உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், பிரிட்ஜ் பின்புறம் போன்றவற்றில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுவதற்கு முன்பாகவே இப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் நேரடியாக மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறையினால் பரிசீலித்ததன் வாயிலாக பயனாளிகளுக்கு இன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இன்றைய தினத்தில் அதிக அளவில் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே இம்மனுக்களை கொடுத்திருந்தால், சம்மந்தப்பட்ட துறைகளிடம் அனுப்பப்பட்டு, இவர்களுக்கும் இன்றைய தினத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏதுவாக அமைந்திருக்கும். எனவே, இன்றைய தினம் பெறப்பட்ட மனுக்கள் சம்மந்தப்பட்ட துறைகளிடம் அனுப்பப்பட்டு 30 நாட்களுக்குள் மனுக்கள்மீது உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் இல.சுப்பிரமணியன், தெரிவித்தார்.இம்முகாமில் வானூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.சக்ரபாணி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் கே.சரஸ்வதி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ரஞ்சனி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அருனாசலம், மாவட்ட வழங்கல் அலுவலர் இராஜேந்திரன், துணை ஆட்சியர் (பயிற்சி) காயத்திரி சுப்பிரமணி, உதவி இயக்குநர் (நிலஅளவை) சண்முகம், வேளாண்மை இணை இயக்குநர் செல்வராஜ், வேளாண்மை அலுவலர் சுரேஷ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் அன்பழகி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.