முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலை மாவட்டத்தில் ஐடிஐ முடித்த 43 மாணவர் களுக்கு பணிஆணை:அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்

திங்கட்கிழமை, 1 ஜனவரி 2018      வேலூர்
Image Unavailable

தி.மலை மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனைகளுக்கு தொழிற்பயிற்சி முடித்த 43 பேருக்கு பணியானையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்.

பயிற்சி பணி

தி.மலை மாவட்டத்தில் 10 அரசு போக்குவரத்து பணிமனைகள் உள்ளது. இப்பணிமனைகளுக்கு ஐடிஐ முடித்த 43 பேரை தேர்வு செய்து ஒரு வருட தொழிற்பழகுனர் பயிற்சி பணி வழங்கப்பட உள்ளது. இதற்கான ஆணையை ஆரணியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்.

இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.9250 ஊதியம் வழங்கப்பட உள்ளது. என்று தெரிவித்தார். உடன் ஆரணி கிளை மேலாளர் வெங்கடேசன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், முதுநிலை கண்காணிப்பாளர் சுப்பிரமணியம், முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் க.சங்கர், அதிமுக ஒன்றிய செயலாளர் பி.ஆர்.ஜி.சேகர், நகர நிர்வாகி பாரிபாபு, எம்ஜிஆர் மன்ற நிர்வாகி அ.கோவிந்தராசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து