எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பிரதான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலை புதிய பொலிவுடன் மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைளை அரசு மேற்கொள்ளும் என தமிழக செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தமிழக விளம்பரம் மற்றும் செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜ் நேற்று வந்தார். அவரை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் பாரதி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் கோயிலுக்கு சென்று அவர் பயபக்திடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ, இணை ஆணையர் பாரதி ஆகியோர் கோயில் பகுதியில் கிரி பிரகாரம் மண்டபம் இடித்த பகுதிகள், தொடர்ந்து கோயில் கலையரங்கம் பகுதியில் அகற்றப்பட்ட கடைகள், மேலும் வியாபாரிகளுக்கு புதிய கடைகள் கட்டப்படுவதற்காக அனுகிரக மண்டபம், ஜெயந்திநாதர் விடுதி வளாகம், நாழிகிணறு பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தன. பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:2018ம் ஆண்டு புத்தாண்டில் தமிழக மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காக கோயிலில் பிரார்த்தனை செய்தோம். இக்கோயிலில் கோயில் கிரி பிரகாரம் மண்டபம் இடிவதற்கு முன்பே அதனை இடிக்க வேண்டும், அப்புறப்படுத்த வேண்டும் கோயில் நிர்வாகம் தீர்மானமாக போட்டு அனுப்பியிருந்தனர். அதன் அடிப்படையில் உடனடியா பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனால் அதற்குள்ளாகவே எதிர்பாராமல் அசம்பாவிதம் நடந்து விட்டது. உடனடியாக தமிழக முதல்வர் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க அமைச்சரை அனுப்பி அமைச்சரும், மாவட்ட கலெக்டரும் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்த பெண்ணிற்கு ரூ.5 லட்சம் வழங்கி, அவர்களின் வாரிசுகளுக்கு அவர்கள் படித்து முடிந்த பிறகு அறநிலையத்துறையில் பணி செய்வதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் நடவடிக்கையாக கட்டிடங்களில் தன்மைகளை, ஆராய்ந்து கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. அப்படி இடிக்கும் போது, வியாபாரிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக கடைகள் அகற்றப்பட்டுள்ளன. அப்படி அகற்றப்பட்ட கடைகளுக்கு மாற்றாக வேறு இடத்தில் கடைகளை மாற்றி தர வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் நானும், அறநிலையதத்துறை இணை ஆணையர், தக்கார், மாவட்ட செலாளர் ஆகியோர் வியாபாரிகள் கூறி இடங்களில் நேரில் பார்த்து ஆய்வு செய்தோம். பல இடங்களை பார்த்துள்ளோம். ஜெயந்திநாதர் விடுதி வளாகத்தில் 21 கடைகளும், மேலும் அனுக்கிர மண்டபம், நாழிகிணறு பக்கத்தில் நிரந்தரமாக பஸ் ஸ்டாண்டாக செயல்பட துவங்கியுள்ளது. இதனால் அந்த பகுதியிலும் தேவஸ்தான கேண்டின் பகுதியிலும், அனுகிரக மண்டபத்திலும், நாழிகிணற்றிலிருந்து பஸ் ஸ்டாண்ட் செல்லும் பாதைகளை நாங்கள் மட்டுமல்ல, வியாபாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளோம். கோயில் கிரி பிரகார மண்டபத்தை கட்டுவதற்கு உபயதாரர் தயாராக இருக்கின்றனர். கல் மண்டபமாக தான் கட்டப்பட வேண்டும். இதற்கான திட்ட மதிப்பீடு தயாராகவில்லை. விரைவில் அறநிலையத்துறை ஆணையர் மற்றும் அதிகாரிகள் வந்து திட்ட மதிப்பீடு தயார் அரசு, கோயில் நிர்வாகமும் செய்யும். இந்தியாவில் முக்கியமான கும்பகோணம் மகாமகத்தை சிறப்பாக நடத்தியதற்கு மத்திய அரசு பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளது. அதே போது இந்தியாவில் பஞ்சாப் பொற்கோயில் எல்லாம் உள்ள போது, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் பழமை மாறாமல் பாதுகாப்பதற்காக மத்திய அரசு சிறப்பு விருது வழங்கியுள்ள கௌரவித்துள்ளது. அதே போல் திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா, திருச்செந்தூர் கோயில் கந்த சஷ்டி விழா ஆகியவை சிறப்பாக நடத்தி முடித்துள்ளோம்.
தமிழகத்தில் அரசியல் வரலாற்றில் இல்லாத வகையில் 6 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோயில்களில் கும்பாபிஷேக விழா நடத்தியுள்ளோம். அதே போல அன்னதான திட்டத்தை விரிவுப்படுத்தி செயல்படுத்தியுள்ளோம். இந்தியாவில் தமிழகம் தான் முன்னோடி துறையாக அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது. திருச்செந்தூர் கோயிலில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதிய பொலிவுடன் கோயிலை மாற்றுவதற்கு அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ளும். இதற்காக விரைவில் அதிகாரிகள் வர உள்ளனர். தமிழகத்தில் பழனி தண்டாயுதபாணிக்கு கோயிலுக்கு அடுத்தப்படியாக அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் கோயில் உள்ளது. பிரதான கோயிலான இக்கோயிலில் நிரந்த திட்டங்கள் நடக்க உள்ளது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா 30 மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 31ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் நடந்த விழாவில் தமிழக முதல்வர் பேசுகையில், டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என அறிவித்தார். இது என்னுடைய துறையில் வருகிறது. இதனால் மணி மண்டபம் கட்டுவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். அதற்குரிய இடத்தை வருவாய் துறை அதிகாரிகளிடம் பேசி ஆய்வு செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் செல்லப்பாண்டியன், கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், நகர செயலாளர் மகேந்திரன், முன்னாள் டவுன் பஞ்சாயத்து தலைவர் சுரேஷ்பாபு, இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் வினோத் ஆகியோர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.