முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடுவானில் மோதலில் ஈடுபட்டதால் நடவடிக்கை: ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் 'விமானிகள் உரிமம்' ரத்து

வியாழக்கிழமை, 4 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, நடுவானில் மோதலில் ஈடுபட்ட விமானிகள் உரிமத்தை விசாரணை முடியும் வரை ரத்து செய்து விமான போக்குவரத்து இயக்குனரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானிகளுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதையடுத்து பெண் விமானியின் கன்னத்தில் ஆண் விமானி அறைந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணை நிறைவடையும் வரை சம்பந்தப்பட்ட விமானிகள் பணியாற்றத் தடை விதித்தும் அவர்களின் உரிமத்தை ரத்து செய்தும் விமான போக்குவரத்து இயக்குநரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

விமானிக்கு அறை...

கடந்த திங்கள்கிழமை லண்டனில் இருந்து மும்பை வந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தை மூத்த விமானி ஒருவர் இயக்கினார். அவருடன் பெண் விமானியும் இருந்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக பெண் விமானியை அவர் அறைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து விமான ஓட்டி அறையில் இருந்து உடனடியாக அப்பெண் கண்ணீருடன் வெளியேறினார். பின்னர், விமான பயணிகளின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு மீண்டும்  விமானி அறைக்கு சென்றுள்ளார். 

உரிய விசாரணை...

அதற்கு அடுத்த சில மணிநேரத்தில் விமானம் மும்பை வந்தடைந்ததும் இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.இந்த விவகாரம் குறித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடமும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி உரிய விசாரணை நடத்துமாறு விமான போக்குவரத்து இயக்குநரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து