முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானின் நிதி ஆதாரங்களை முடக்க அமெரிக்காவுக்கு செனட்டர் ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : பாகிஸ்தானுக்கு கிடைக்கும் சர்வதேச நிதியுதவிகளைத் தடுத்து நிறுத்த அமெரிக்கா திட்டமிட் டுள்ளது. இதற்கான  ஆலோசனையை சென்ட்டர் ராண்ட் பால் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் நாச வேலைகளில் ஈடுபடும் தலிபான்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இதன்காரண மாக பாகிஸ்தான் ராணுவத்துக்கு வழங்கி வந்த நிதியுதவியை ஒட்டுமொத்தமாக அமெரிக்கா நிறுத்திவிட்டது.

இதன்பிறகும் பாகிஸ்தான் திருந்தாவிட்டால் அந்த நாட்டின் நிதி ஆதாரங்களை முடக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறியபோது, சர்வ தேச செலாவணி நிதியம் உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகள் பாகிஸ்தானுக்கு வழங்கி வரும் கடன் உதவிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பாகிஸ்தானுக்கு தற்போது வழங்கப்பட்டிருக்கும் நேட்டோ அல்லாத நட்பு நாடு என்ற அந்தஸ்தும் பறிபோகும் என்று தெரிவித்தன.

தீவிரவாதத்தை ஒழிப்பதற் காக பாகிஸ்தான் ராணுவத்துக்கு, அமெரிக்க அரசு அதிநவீன ஆயுதங்களையும் நிதியுதவியையும் அளித்து வந்தது. இரண்டையும் நிறுத்த அமெரிக்கா முடிவு செய்திருப்பது அந்த நாட்டுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

அமெரிக்க செனட்டர் ராண்ட் பால் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், பாதுகாப்பு நிதியுதவி மட்டுமல்ல, பாகிஸ்தானுக்கான அனைத்து நிதியுதவிகளையும் நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ட்விட்டரில் அளித்துள்ள பதிலில், “இது மிகச் சிறந்த யோசனை” என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து