முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானில் போராட்டம் மக்களின் அடிப்படை உரிமை : அமெரிக்கா எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டேன் : ஈரானில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து கடந்த 28-ம் தேதி முதல் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே பேசியபோது, “ஈரானில் மக்கள் எழுச்சியுடன் போராடி வருகின்றனர். அவர்கள் அடிப்படை உரிமைகளைக் கோருகின்றனர். உலகம் உங்களை (ஈரானை) உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.

பிரான்ஸ், ரஷ்யா, சீனாவின் தூதர்கள் பேசியபோது, “ஈரானில் இப்போது நடைபெறும் போராட்டங்களால் உலக அமைதிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இந்த விவகாரத்தை பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிப்பது பொருத்த மாக இருக்காது” என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து