முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஹ்ரைனில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு

திங்கட்கிழமை, 8 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

பஹ்ரைன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று பஹ்ரைன் சென்றதை அடுத்து, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தரப்பின் ட்விட்டர் பதிவில், ''பஹ்ரைனில் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவரான பிறகு அவர் செல்லும் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம் இது.
பஹ்ரைன் விமான நிலையத்தில் ராகுல் காந்தியின் ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் சூழ்ந்திருந்தனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹ்ரைன் பிரதமர் காலிஃபா பின் சல்மான் காலிஃபா மற்றும் அரச குடும்பத்தினரை ராகுல் சந்திக்கிறார். இந்திய வம்சாவளியினர் உடனான உரையாடல் இந்தப் பயணத்தின் முக்கியமான நிகழ்வாக இருக்கும். சுமார் 35 லட்சம் மக்கள் இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்குப் புலம் பெயந்தவர்கள் ஆவர்.

'இந்திய வம்சாவளி மக்களின் உலகளாவிய அமைப்பால்' GOPIO) நடத்தப்படும் விழாவில் ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். சுமார் 50-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்துகொள்கின்றனர். அத்துடன் இந்திய வம்சாவளி வணிகத் தலைவர்களையும் ராகுல் காந்தி சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து