முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகி.ல் ஐ.எஸ். தீவிரவாத ஆதிக்கம் அதிகரிப்பு பி.ஐ.பி.எஸ். என்ற தொண்டு அமைப்பு தகவல்

செவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ஐ.எஸ். தீவிரவாத ஆதிக்கம் அதிகரித்து வருவதாக பாகிஸ்தானைச் சேர்ந்த பி.ஐ.பி.எஸ். என்ற தொண்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த தொண்டு அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாகிஸ்தான் முழுவதும் கடந்த ஓராண்டில் 6 மிகப்பெரிய தாக்குதல்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர். இதில் 153 பேர் பலியாகினர். சிந்து மற்றும் பலுசிஸ்தான் பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதேநிலை நீடித்தால் சிரியா, ஈராக்கிற்கு ஏற்பட்ட நிலை பாகிஸ்தானுக்கும் ஏற்படும். வெளிநாடுகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்கு வரக்கூடும். இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2014-ல் சிரியா, ஈராக்கில் பெரும் பகுதியை கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கு தனி அரசாங்கம் நடத்தினர். அமெரிக்க கூட்டுப்படைகள் உதவியுடன் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஈராக் அரசு கட்டுப்படுத்தியுள்ளது. இதேபோல சிரியாவில் ரஷ்ய ராணுவ உதவியுடன் ஐ.எஸ். தீவிரவாதிகள் அழிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கால் ஊன்றி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து