முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருணாச்சல் எல்லையில் சாலை அமைப்பதில்லை: சீனா உறுதியென ராணுவ தலைமை தளபதி தகவல்

செவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, அருணாச்சல பிரதேச எல்லையில் சாலை அமைப்பதில்லை என சீனா உறுதியளித்துள்ளதாக ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

சிக்கிம் மாநில இந்திய எல்லைப் பகுதியான டோக்லாம் பகுதியில் 4 மாதங்களுக்கு முன் சீன ராணுவம் ஊடுருவியது. பின்னர் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் சீன ராணுவம் படைகளை வாபஸ் பெற்றுவருகிறது. இந்நிலையில், அருணாச்சல பிரதேச டியூட்டிங் பகுதிக்குள் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சீன ராணுவத்தினர் சமீபத்தில் ஊடுருவினர். அங்கு சாலை அமைக்க இயந்திரங்களுடன் சீன ராணுவத்தினர் வந்தனர். தகவல் அறிந்ததும் இந்திய ராணுவத்தினர் அங்கு விரைந்து சென்றனர். அதனால், சாலைப் பணிக்காக கொண்டு வந்த பொருட்களை விட்டுவிட்டு சீன ராணுவத்தினர் சென்றதாக செய்தி வெளியானது.

இந்நிலையில், டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், அருணாச்சலில் இந்தியா - சீனா ராணுவத்தின் சார்பில் எல்லை அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் 2 நாட்களுக்கு முன் நடந்தது. அப்போது அருணாச்சல் எல்லையில் சாலை அமைப்பதில்லை என்று சீனா உறுதி அளித்தது’ என்றார். இதையடுத்து சீனா ராணுவத்தினரிடம் கைப்பற்றப்பட்ட சாலை பணிக்கான இயந்திரங்கள் அந்நாட்டிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து