முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தது

செவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்துவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை டிசம்பர் 31ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. ஆனால் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில்  9 சதவீதம் குறைவாக பெய்தது. இந்நிலையில் தென் மேற்கு வங்கக்கடலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வுநிலை உருவானதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தது. இந்ந காற்றழுத்தம் நேற்று வலுவிழந்துவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிதுள்ளது. காற்றழுத்த தாழ்வுநிலை வலுக்குறைந்துள்ளதால் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 2 நாட்களுக்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து