முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சி பகுதிகளில் திறந்தவெளியினை கழிப்பிடமாக பயன்படுத்துவதை தடுப்பது தொடர்பாக ஆணையாளர் அனீஷ் சேகர் ஆய்வு

புதன்கிழமை, 10 ஜனவரி 2018      மதுரை
Image Unavailable

மதுரை.-மதுரை மாநகராட்சி வண்டியூர் நேதாஜி நகர், திருப்பாலை கண்மாய் ஆகிய பகுதிகளில் திறந்த வெளியினை கழிப்பிடமாக பயன்படுத்துவதை தடுப்பது தொடர்பாக ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்,  ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி தூய்மைக்கான நகரில் முதலிடம் பெறுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாநகராட்சி பகுதிகளில் திறந்த வெளியினை கழிப்பிடமாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் பொது இடங்கள், கண்மாய்கள், குளங்கள், ரயில்வே நிலையங்கள், ஆறுகள் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி  மண்டலம் எண்.2 பகுதிக்கு உட்பட்ட வண்டியூர் நேதாஜி நகர், திருப்பாலை  கண்மாய் பகுதிகள் ஆகிய பகுதிகளில் திறந்த வெளியினை கழிப்பிடமாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் ஆணையாளர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு திறந்த வெளியினை கழிப்பிடமாக பயன்படுத்த கூடாது என்றும், கழிப்பறைகளை பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கூறினார். நேதாஜி நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பொது கழிப்பறையினை விரைந்து முடிக்குமாறும், தனிநபர் கழிப்பறை வேண்டி விண்ணப்பித்து உள்ள வீடுகளுக்கு விரைவில் தனி நபர் கழிப்பறை கட்டி தருமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார். அப்பகுதியில் நீல நிற டிரம்புகளில் பிடித்து வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் டெங்கு கொசு புழு உற்பத்தி குறித்து ஆய்வு செய்து பிடித்து வைத்திருக்கும் குடிநீரினை மூடி பாதுகாப்பாக வைக்குமாறும் மழைநீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ளுமாறும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து திருப்பாலை கண்மாயில் திறந்த வெளியினை கழிப்பிடமாக பயன்படுத்துவதை ஆய்வு மேற்கொண்டு காலை நேரங்களில் கண்மாய் கரையில் பணியாளர்களை நிறுத்தி கண்காணிக்குமாறும், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கண்மாய்களில் திறந்த வெளியினை கழிப்பிடமாக பயன்படுத்தக் கூடாது எனவும், பயன்படுத்தினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்குமாறும் கூறினார். மேலும் திருப்பாலை காலனி மந்தையம்மன் கோவில் தெருவில் தனியார் பங்களிப்போடு கட்டப்பட்டு வரும் தனிநபர் கழிப்பறைகளை பார்வையிட்டு விரைவில் முடிக்க உத்தரவிட்டார். அப்பகுதியில் ஒரு வீட்டிற்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த தனிநபர் கழிப்பறையினை பயன்படுத்தாமல் பழைய பொருட்களை வைக்கும் அறையாக வைத்திருப்பதை பார்வையிட்டு உடனடியாக ரூ.500 அபராதம் விதித்து அப்பொருட்களை அகற்ற உத்தரவிட்டதுடன் இனிமேல் கழிப்பறையினை முறையாக பயன்படுத்த வில்;லை எனில் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
இந்த ஆய்வின்போது உதவி நகர்நல அலுவலர்  பார்த்திப்பன், செயற்பொறியாளர்  .ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சித்திரவேல், சுகாதார அலுவலர்சிவசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்  .அலாவுதீன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து