முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அகில இந்திய அளவில் கூடைப்பந்தாட்ட போட்டியில் முதலிடம் பெற்றுள்ள மாணவனுக்கு பாராட்டு விழா

புதன்கிழமை, 10 ஜனவரி 2018      திண்டுக்கல்
Image Unavailable

வத்தலக்குண்டு ஜன - அகில இந்திய அளவில் கூடைப்பந்தாட்ட போட்டியில் முதலிடம் பெற்றுள்ள பட்டிவீரன்பட்டி நா.சு.வி.வி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவனுக்கு பாராட்டு விழா நடந்தது.
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி நா.சு.வி.வி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் விஷ்ணுராம் காதுகோளாதோர் கூடைப்பந்து போட்டியானது அகில இந்திய அளவில் ஜார்க்கண்ட மாநிலம் ராஞ்சியில் 22வது அகில இந்திய அளவில் நடைபெற்ற இந்த போட்டியில்
புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற நா.சு.வி.வி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் விஷ்ணுராம் முதலிடம் பெற்று பரிசு மற்றும் சான்றிதழ் பெற்று வந்தமைக்கு பட்டிவீரன்பட்டி நா.சு.வி.வி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளியின் மேலாண்மைக்குழு தலைமை ராஜாராம், உபதலைவர் காமராஜ், செயலர் சங்கரலிங்கம், இணை செயலாளர்  கருணாகரன், பள்ளி செயலர் அய்யனார்வெங்கடேஷ், மெட்ரிக்பள்ளி தாளாளர் கருணாகரன், செயலர் பிரசன்னா, பெண்கள் பள்ளி செயலர் வெங்கடேஷ¢, பெண்கள் பள்ளி தலைவர் பொன்பாண்டி, நா.சு.வி.வி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், மெட்ரிக்பள்ளி முதல்வர் ஆத்தியப்பன், மற்றும் நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டு மாணவனை பாராட்டினார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து