முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருப்புக்கோட்டை அருகே தனியார் பேருந்து டிராக்டர் மோதல் : மாணவர் இருவர் உள்பட மூன்று பேர் பலி

புதன்கிழமை, 10 ஜனவரி 2018      விருதுநகர்
Image Unavailable

அருப்புக்கோட்டை - அருப்புக்கோட்டை அருகே தனியார் பேருந்து டிராக்டர் மோதல் பாலிடெக்னிக் மாணவர் இருவர் உள்பட மூன்று பேர் பலி, 39 பேர் படுகாயம் அடைந்தனர்.  அருப்புக்கோட்டையிலிருந்து விருதுநகரை ரோட்டில் டிராக்டரில் விவசாயப்பொருட்கள், ஆட்களை ஏற்றி சென்று கொண்டிருந்தது.  துனைமின்நிலையம் அருகே செல்லும் போது விருதுநகரிலிருந்து அருப்புக்கோட்டை நோக்கி; வந்த தனியார் பஸ் எதிர்பாராமல் மோதியது.  இதில் பஸ் நடுரோட்டில் கவிழ்ந்து பின் சக்கரங்கள் கழன்று உருண்டு ஓடியது.  டிராக்டர் எஞ்சின் முழுவதும் சேதம் அடைந்தது.  இதில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த பாலவனத்தத்தை சேர்ந்த உத்திரகுமார் மகன் மாரிச்செல்வம் சுரேஷ் மகன் அருண்குமார் ஆகிய இருவரும் பேருந்தின் அடியில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.  இருவரும் கல்குறிச்சியில்; உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர்.  மேலும் ராமசாமி மகன் செல்வம், வயது 50, அவரும் சம்பவ இடத்திலேயே இறந்தார்.  மேலும் பேருந்து மற்றும் டிராக்டரில் பயணம் செய்த கஸ்தூரி, சாமுவேல், முத்துலட்சுமி, ராமையா, மதியழகன், சுமதி, வரதராஜன், லட்சுமி, வேல்முருகன், செல்வம், சங்கரேஸ்வரி, மாயாண்டி, பாண்டி உள்பட 39 பேர் காயமடைந்தனர்.  இதில் இருவர் மேல்சிகிச்சைக்கு மதுரை அரசு மருத்துவமணைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.  விபத்து நடந்த இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன், துனை காவல் கண்காணிப்பாளர் ஆர்டிஒ செல்வி, தாசில்தார் ரமணி, வட்டார போக்குவரத்து அலுவலர் மாணிக்கம் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு காயமடைந்தவர்களை சிகிச்சைக்கு அருப்புக்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை அருப்புக்கோட்டை அ.தி.மு.க. நகரச் செயலாளர் கண்ணன் நகர அவைத் தலைவர் பொன்ராம், கூட்டுறவு சங்கத் தலைவர் ஜோதிகா ராஜேந்திரன் வார்டு செயலாளர் பூக்கடை ராமச்சந்திரன் சந்தித்து ஆறுதல் கூறினர்.  படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு வி.வே.வெ. நர்ஸிங் கல்லூரி மாணவிகள் 38 பேர் சிறப்பான மருத்துவ சேவை செய்தனர். விபத்தில் நடுரோட்டில் பஸ் கவிழ்ந்து கிடந்ததால் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத் தக்கது.  இந்த விபத்துச் சம்பவம் அருப்புக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து