முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை: எதிர்ப்பை பதிவு செய்ய மகளுடன் டி.வி. செய்தி வாசித்த பெண்

வெள்ளிக்கிழமை, 12 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் 7 வயது சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒரு தாயை வெகுவாக பாதித்திருக்கிறது. பத்திரிகையாளராக பணி புரியும் அந்தத் தாய் செய்தி வாசிக்கும்போது தனது சின்னச்சிறு மகளை மடியில் அமரவைத்துபடியே செய்தியை வாசித்தார்.

7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் இவ்வாறு செய்துள்ளார்.

பாகிஸ்தானின் சமா டிவியைச் சேர்ந்தவர் கிரண் நாஸ். அன்றைய தினத்தின் செய்தியை அவர் வாசிக்கத் தொடங்கியபோது, "நான் இன்று வெறும் கிரண் நாஸ் இல்லை. நான் ஒரு தாய். 7 வயது சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலையும் செய்யப்பட்டிருக்கிறார். இது மனிதநேயத்தின் மீது நிகழ்த்தப்பட்ட கொலை. இது இந்த அரசாங்கத்தின் இயலாமையை உணர்த்துகிறது" என்று கூறினார்.

இந்த சம்பவம், செய்தியைப் பார்த்த பலரையும் நெகிழச்செய்தது.

நடந்தது என்ன?

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருக்கிறது கசூர் மாவட்டம். அப்பகுதியைச் சேர்ந்த சிறுமி கடந்த ஜனவரி 5-ம் தேதி குரான் வகுப்புக்காக சென்றிருந்தார். ஆனால், அவர் வீடு திரும்பவில்லை. அவர் கடத்தப்பட்டார். இரண்டு நாட்களுக்குப் பின் அவர் சடலமாக மீட்கப்பட்டார். அவர் பல முறை பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. இந்த சம்பவத்துக்கு பின்னணியில் சீரியல் கொலைகாரன் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் அம்மாவட்டத்தில் பெருங் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீதி கேட்டு மக்கள் தொடர்ந்து தெருவில் இறங்கி போராடி வருகின்றனர். நிலைமையை சமாளிக்க போலீஸ் தடியடி நடத்தியும் இன்னும் அங்கு போராட்டங்கள் ஓயவில்லை. போலீஸாரின் அலட்சியமே இந்த சம்பவத்துக்கு காரணம் என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு.

சிறுமியின் தந்தை முகமது அமின் கூறும்போது, "போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் வேகத்தை எனது மகளை மீட்பதில் காட்டியிருந்தால் அவள் உயிருடன் இருந்திருப்பாள்" என வேதனை தெரிவித்தார்.
இதற்கிடையில், இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. சிறுமி பலாத்கார, கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபரை கண்டுபிடிக்கும் போலீஸாருக்கு ராணுவமும், ஐஎஸ்ஐ அமைப்பும் உதவுமாறு பாகிஸ்தான் ராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து