எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.- தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரிலுள்ள நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அதிகாரிகளுடன் அலுவலர்கள் இணைந்து சர்க்கரை பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் முன்கூட்டியே நேற்று காலை நடைபெற்ற பொங்கல் விழாவிற்கு நகராட்சி ஆணையாளர் திருமதி.சரஸ்வதி தலைமை வகித்தார்.நகராட்சி சுகாதார அலுவலர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தார்.நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் வரவேற்றார்.இந்த விழாவில் நகராட்சி அலுவலகத்தில் கரும்புகளால் தோரணம் அமைத்து வண்ணக் கோலங்களிட்டு புதிய பானையில் சர்க்கரை பொங்கலிடப்பட்டு அதிகாரிகள்,அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கரும்புடன் பொங்கல் வழங்கப்பட்டது.பின்னர் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையை பிரித்து கொடுத்த வீட்டு உரிமையாளர்கள் ஐந்து பேருக்கு கரும்புகள் பரிசாக வழங்கப்பட்டது. அதில் சிறப்பு பரிசாக திருமங்கலம் 14வது வார்டு ரோஜா தோட்டம் பகுதியில் குப்பைகளை சிறப்பாக தரம்பிரித்து கொடுத்த கோட்டைசாமி என்பவரது மனைவி தேவிபிரியாவிற்கு திருமங்கலம் நகராட்சி சார்பில் பொங்கல் சீர்வரிசையாக பொங்கல் பானை,கரும்பு,பச்சரிசி,வெல்லம்,முந்திரிபருப்பு,ஏலக்காய் போன்ற பொருட்களை வீடுதேடிச் சென்று திருமங்கலம் நகராட்சி ஆணையாளர் திருமதி.சரஸ்வதி வழங்கி பாராட்டு தெரிவித்தார்.இவ்விழாவில் நகராட்சி மேலாளர் மல்லிகா,சுகாதார ஆய்வாளர் சசிகலா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதே போன்று தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவினை முன்னிட்டு திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொங்கல்விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.இதற்காக அலுவலகம் முழுவதிலும் வண்ணக் கோலங்களிட்டு கரும்புகளை தோரணமாக கட்டி புதுப்பானையில் சர்க்கரைப் பொங்கலிட்டு கோலாகலமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் உதயகுமார்,வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) ராஜேந்திரன்,மேலாளர் சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டு அலுவலர்களுக்கும் பணியாளர்களுக்கும் சர்க்கரைப் பொங்கலுடன் கரும்புகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள்.அப்போது அதிகாரிகள்,அலுலர்கள்,பஞ்சாயத்து கிளார்க்குகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி அணிந்து வந்திருந்தனர்.
இதை தொடர்ந்து திருமங்கலம் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கு திருமங்கலம் சார்பு நீதிமன்ற நீதிபதி ஜி.முத்துக்குமரன் தலைமை வகித்தார்.முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி திருமதி.ஸ்ரீவித்யா,கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி திருமதி.பர்ஷாத்பேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருமங்கலம் வழக்கறிஞர் சங்கத்தலைவர் சி.ராமசாமி வரவேற்று பேசினார்.இவ்விழாவில் சங்கத்தின் முன்பாக பொங்கல் வைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.இதையடுத்து நடைபெற்ற பொங்கல் விளையாட்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கயிறு இழுத்தல்,கண்கட்டி பானை உடைத்தல், இசை நாற்காலி உள்ளிட் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்களுக்கு நீதிபதிகள் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.இந்த பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.விழாவின் நிறைவில் சங்கத்தின் செயலாளர் கன்னையா நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி6 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 5 hours ago |
ரவா பர்பி1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து: சந்திரசேகர ராவ் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
17 Apr 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக வந்த புகாரையடுத்து சந்திரசேகரராவ் இன்று தனது நிலைப்பாட்டை விளக்குமாறு தேர்தல் ஆணையம்
-
கோவையில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்திக் வாக்கு சேகரிப்பு
17 Apr 2024கோவை : கோவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? - எடப்பாடி பழனிசாமி பேட்டி
17 Apr 2024சேலம் : மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
-
சிறையில் இருந்தே ஆட்சி செய்ய கெஜ்ரிவாலை அனுமதிக்க வேண்டும் : டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி மனு
17 Apr 2024புதுடெல்லி : சிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி கட்சி மனுத்தாக்கல் செய்துள்ளது.
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
பிரசாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு: நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி
17 Apr 2024வேலூர் : பிரச்சாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நடிகர் மன்சூர் அலிகான் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.