முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்டா பாசனத்திற்கு 7 டி.எம்.சி தண்ணீர் திறக்க சித்தராமையாவுக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

சனிக்கிழமை, 13 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை :  தமிழக விவசாயிகளின் பாசனத்திற்கு 7 டி.எம்.சி நீரை உடனடியாக திறக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழகத்தில் பயிர் பாசனத்திற்காக கர்நாடக அரசு குறைந்த பட்சம் 15 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கோரியுள்ளார்,

டெல்டா விவசாயிகளின் நலனுக்காக கர்நாடகா உடனடியாக 7 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கான எஞ்சிய காவிரி நீரை 2 வாரங்களில் கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் பாசனங்கள் முடிந்துள்ள நிலையில் அங்குள்ள அணைகளில் 40.82 டிஎம்சி தண்ணீர் உள்ளது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார். மேட்டூர் அணையில் 21.27 டிஎம்சி தண்ணீர் மட்டுமே தண்ணீர் உள்ளது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ஆகவே உடனடியாக தண்ணீரை திறந்துவிடுமாறு சித்தராமையாவை முதல்வர் எடப்பாடி வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து