முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதிகள் சதி குறித்து எச்சரிக்கை: ஜம்மு-காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு

சனிக்கிழமை, 13 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

ஜம்மு : காஷ்மீர் மாநிலம் சம்பல் பள்ளத்தாக்கில் உள்ள ஹக்பரா எனும் ஊரை சேர்ந்த லத்தீப் என்பவர் தொலைபேசியில் பேசியதை மத்திய உளவுத் துறையினர் இடைமறித்து கேட்டனர். அப்போது காஷ்மீரில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பது அந்த உரையாடல் மூலம் தெரியவந்தது. ஜம்மு நகரில் உள்ள முக்கிய ராணுவ தளத்தை தகர்க்கவும் மற்றும் ஜம்மு நகரில் உள்ள முக்கிய பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தவும் தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதில் அந்த தொலைபேசி உரையாடல் மூலம் தெரிந்தது.

பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத இயக்கம் இந்த சதி திட்டத்தை தீட்டியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது பற்றி காஷ்மீர் மாநில அரசுக்கு மத்திய உள்துறை தகவல் தெரிவித்து எச்சரித்துள்ளது. இதையடுத்து ஜம்மு நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஜம்முவில் உள்ள ராணுவ முகாம் மற்றும் முக்கிய பகுதிகளில் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு படையினரும் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து