முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: காஷ்மீரில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

திங்கட்கிழமை, 15 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 6 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கடும் துப்பாக்கிச் சண்டை...

ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள எல்லைப்பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி மேற்கொண்டனர். இதைக்கவனித்த ராணுவத்தினர் உள்ளூர் பாதுகாப்பு படையினருடன் இணைந்து பயங்கரவாதிகளின் முயற்சியை முறியடித்தனர். இந்த சம்பவத்தின் போது, இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சண்டையில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

ஜெய்ஷ் இ முகம்மது...

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அனைவரும் பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் என கூறப்படுகிறது. வரும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து