முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓகி புயலினால் காணாமல் போன 149 மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்குவது குறித்த பணிகள் மீன்வளத்துறை இயக்குநர் தண்டபாணி, கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 16 ஜனவரி 2018      கன்னியாகுமரி
Image Unavailable

ஓகி புயலினால் காணாமல் போன 149 மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்குவதுகுறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் களஆய்வு  பணியினை   மீன்வளத்துறை இயக்குநர்  வி.பி. தண்டபாணி மற்றும் கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்  ஆகியோர் ஆய்வு செய்தனர்கன்னியாகுமரி மாவட்டம், ஓகி புயலினால் காணாமல் போன 149 மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்குவது குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் களஆய்வு பணியினை மீன்வளத்துறை இயக்குநர்  வி.பி. தண்டபாணி .,  மற்றும் கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான் ., ஆகியோர்  ஆய்வு செய்தனர்.பின்னர், மீன்வளத்துறை இயக்குநர்  செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:-

களஆய்வு 

 ஓகி புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத்தொகை வழங்குவது தொடர்பாக தமிழக அரசு 12-01-2018 அன்று அரசாணை வெளியிட்டது. அதன்படி,  மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வட்டாட்சியர் தலைமையில், வட்டார அளவில் மீன்துறை ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மீனவ கிராமத்தில் பிரதிநிதிகள் மூன்று பேர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு காணாமல் போன மீனவர்களின் விவரத்தை உறுதி செய்யும் கள ஆய்வு பணி இன்று முதல் நீரோடி, வள்ளவிளை, சின்னதுறை, பூத்துறை, மார்த்தாண்டன்துறை, மார்த்தாண்டம் ஆகிய கிராமங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த குழு வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் காணாமல் போன 149 மீனவர்களின் விவரம் குறித்து உறுதி செய்யப்பட்டபின், மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டு அடுத்த நடவடிக்கையாக நிவாரண உதவித்தொகை வழங்கப்படும். இவ்வாறு மிPன்வளத்துறை இயக்குநர்  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது மீன்வளத்துறை இணை இயக்குநர் (சென்னை) ஜூடு ஆம்ஸ்ட்ராங், மீன்வளத்துறை துணை இயக்குநர் வே.லாமேக் ஜெயகுமார், விளவங்கோடு வட்டாட்சியர்  கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து