எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
உறுதி மொழி ஏற்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடந்து வருகிறது. பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்திலும்,பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு உற்சாகமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து உலகப் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் நேற்று காலை 9 மணியளவில் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினர். முன்னதாக மாடுபிடி வீரர்களுக்கு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதிமொழியை வாசிக்க துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் திரும்ப சொல்லி உறுதிமொழியை ஏற்றனர். இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு துவங்கியது.
துவக்கி வைத்தனர்...
வாடிவாசல் முன்பிருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் முதல் ஜல்லிக்கட்டு காளையை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டை துவக்கி வைத்தனர். பின்னர் வாடிவாசல் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் அமர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, கே.டி.ராஜேந்திரபாலாஜி, மணிகண்டன், பாஸ்கரன், கலெக்டர் வீரராகவராவ், எம்.பி.க்கள் ஆர்.கோபாலகிருஷ்ணன், அன்வர்ராஜா, பார்த்திபன், எம்.எல்.ஏ.க்கள் வி.வி.ராஜன்செல்லப்பா, ஏ.கே.போஸ்,நீதிபதி, பெரியபுள்ளான், எஸ்.எஸ்.சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.தமிழரசன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் மா.இளங்கோவன், அலங்காநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஜூலான்பானு, பேரூராட்சி உதவி இயக்குனர் விஜயலெட்சுமி, செயல் அலுவலர் இப்ராகிம் ஷா மற்றும் விழா கமிட்டியினர் ஜல்லிக்கட்டை பார்வையிட்டனர். சுமார் 1 மணி நேரம் முதல்வரும், துணை முதல்வரும் ஜல்லிக்கட்டை பார்வையிட்டனர். பின்னர் 10 மணியளவில் அலங்காநல்லூரில் இருந்து காரில் புறப்பட்டு சென்றனர்.
பாய்ந்த காளைகள்...
அலங்காநல்லூர் கோட்டை முனியாண்டி கோவில் திடல் முன்பாக வாடிவாசல் அமைக்கப்பட்டு காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது. வாடிவாசல் முன்பு 15 மீட்டர் தூரத்திற்கு தேங்காய் நார்கள் போடப்பட்டு இருபுறங்களில் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டு பார்வையாளர்கள் அமர்ந்து பார்ப்பதற்கு கேலரிகளும் அமைக்கப்பட்டிருந்தது. முதன்முதலாக கோவில் காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டது. இந்த காளைகளை யாரும் பிடிக்கவில்லை. இதனை தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டது. எந்தெந்த காளைகள் அவிழ்த்துவிடப்படுகிறது என்பதை அவ்வப்போது ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர்.
பரிசுப் பொருட்கள்...
வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் சீறிப்பாய்ந்து திமிலை பிடித்தபடியே அடக்க முயன்றனர். சில காளைகள் பிடிபட்டது. சில காளைகள் மாடுபிடு வீரர்களிடம் சிக்காமல் சீறிப்பாய்ந்து சென்றது. காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு மோட்டார் சைக்கிள், டி.வி., கட்டில், பீரோ, செல்போன், அண்டா, குத்துவிளக்கு, தங்ககாசுகள், வெள்ளிகாசுகள், கடிகாரம், பேக்குகள், சேர்கள், நாற்காலிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது. கடந்தாண்டை விட இந்தாண்டு மாடுபிடி வீரர்களுக்கு பரிசு மழை பொலிந்தது. அதே போல் பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மொத்தத்தில் மாடுபிடி வீரர்களும், காளைகளின் உரிமையாளர்களும் பரிசுகளை அள்ளிசென்றனர்.
பலத்த பாதுகாப்பு...
இந்த ஜல்லிக்கட்டில் சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, கம்பம், தேனி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டு மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்டு ஜல்லிக்கட்டில் அனுமதிக்கப்பட்டது. இவைகளில் 600 க்கும் கீழான காளைகள் மட்டுமே வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டது. இதே போல் மாடுபிடி வீரர்கள் 1241 பேர் பரிசோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர். ஒரு மணி நேரத்திற்கு 150 பேர் என கணக்கிட்டு மாடுபிடி வீரர்கள் களம் இறக்கப்பட்டனர். இவர்களில் 10 த்திற்கும் மேற்பட்ட வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கேயே சிகிச்சையும் அளிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்கப்பட்டது. 2000 த்திற்கும் மேற்பட்ட போலீசார் மாவட்ட போலீஸ் எஸ்.பி.மணிவண்ணன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஒரு மணி நேரம் கால நீட்டிப்பு
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காலை முதலே வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை இளைஞர்கள் துள்ளிக் குதித்து அடக்கினர். பங்குபெற்ற 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு களம் இறக்கப்பட்டனர்.சட்ட விதிகளுக்கு உட்பட்டு காளைகளின் திமிலை அடக்கி காளையர்கள் தங்க நாணயம், மோட்டார் சைக்கிள், சைக்கிள், பீரோ, சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுகளை அள்ளிச் சென்றனர்.
ஆயிரம் காளைகள் பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் 600க்கும் குறைவான காளைகளே களத்தில் இறக்கி விடப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டிக்கான நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரித்து மாலை 5 மணி வரை நீட்டித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது. விழாக்குழுவினர் விடுத்த கோரிக்கையை ஏற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் அனுமதி வழங்கினர். இதனை தொடர்ந்து இந்த கால நீட்டிப்பானது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 10 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் திடீர் ராஜினாமா
22 Apr 2024டெல் அவிவ் : இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் அஹ்ரோன் ஹலிவா திடீரெனெ ராஜினாமா செய்துள்ளார்.
-
பார்லி. தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்? - சத்யபிரத சாகு விளக்கம்
22 Apr 2024சென்னை : செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதத்தை அளித்த காரணத்தால் தான் வாக்குப்பதிவு சதவீதத்தில் மாறுபாடு ஏற்பட்டது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு த
-
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கேட்டவருக்கு ரூ.75,000 அபராதம் : டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தள்ளுபடி
22 Apr 2024புதுடெல்லி : கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.
-
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு
22 Apr 2024இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
பிரதமரின் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்: தமிழக அமைச்சர் பதிவு
22 Apr 2024சென்னை : பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி
22 Apr 2024சென்னை : விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
கம்யூ. சிந்தனையை செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி : உ.பி.யில் பிரதமர் மோடி பேச்சு
22 Apr 2024அலிகார் : மாவோயிஸ்ட், கம்யூனிஸ்டுகளின் சிந்தனையை இந்தியாவில் செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி செய்வதாக உத்தரப்பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றஞ
-
பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப பிரதமர் புதிய யுக்திகளை வைத்துள்ளார்: ராகுல் காந்தி
22 Apr 2024புதுடெல்லி : மக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்ப பிரதமர் மோடி பல புதிய யுக்திகளை கொண்டிருப்பதாகவும், ஆனால் அவரின் பொய்களுக்கு முடிவு
-
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது : தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தமிழகம், கர்நாடக உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
22 Apr 2024புதுடில்லி, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 22) வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தமிழக மகளிர் காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம்
22 Apr 2024சென்னை : தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஹசீனா சையத் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
சென்னை-சேலம் விமான சேவை நேரம் மாற்றம்
22 Apr 2024சென்னை : சென்னை விமானநிலையத்துக்கு மதிய நேரத்தில் சேலத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த தனியார் ஏர்லைன்ஸ் விமான சேவையின் நேரம் மாலை நேரத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
மே 1-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
22 Apr 2024புதுடெல்லி : சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
ஜம்மு காஷ்மீரில் 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
22 Apr 2024ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் நேற்று 9 இடங்களில் தேசிய புலனாய்வு படை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனையில் ஈடுபட்டனர்.
-
மக்களவை தேர்தல்: சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
22 Apr 2024சூரத் : சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
நாடு முழுவதும் வெப்ப அலை: தேர்தல் ஆணையம் ஆலோசனை
22 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருப்பதால் வாக்குப்பதிவு, பிரச்சாரம் நடைமுறைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து டெல்லியில
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு: 24,000 பணியிட உத்தரவுகளை ரத்து செய்து கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு
22 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்க ஆசிரியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் அமைக்கப்பட்ட 2016-ம் ஆண்டு
-
65 வயதுக்கு மேற்பட்டோரும் மருத்துவ காப்பீடு பெறலாம் : இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
22 Apr 2024புதுடெல்லி, இனி 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் மருத்துவ காப்பீடு பெறலாம் என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்:தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீத குளறுபடிக்கு செயலியே காரணம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
22 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.
-
வல்லவன் வகுத்ததடா விமர்சனம்
22 Apr 2024நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கை விட மாட்டான், கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுருவான்” என்ற வாக்கியத்தை வைத்துக்கொண்டு இயக்குநர் விநாயக்
-
அசல் ஆவண நகல் ஒப்படைப்பு: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-ம் தேதி வரை நீட்டிப்பு
22 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை 34-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும், "நிறம் மாறும் உலகில்"
22 Apr 2024நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளை பேசும் அழகான படமாக இப்படம் உருவாகியுள்ளார் அறிமுக இயக்குந