முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் அருகே நத்தமாடிபட்டியில் ஜல்லிக்கட்டு _ 15 பேர் படுகாயம்

செவ்வாய்க்கிழமை, 16 ஜனவரி 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல்,- திண்டுக்கல் அருகே நத்தமாடிபட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் காளைகள் முட்டி தள்ளியதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகிலுள்ள நத்தமாடிபட்டியில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. இந்த வருடம் திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் போட்டியாக இங்கு நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. 350க்கும் மேற்பட்ட வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தன. மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் படி நடந்த இந்த போட்டியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட எஸ்.பி. சக்திவேல் தலைமையில் போலீசார் பார்வையிட்டனர். பாதுகாப்பிற்காக 150 போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
வாடிவாசலை கடந்த காளைகள் வந்த போது வீரர்கள் போட்டி போட்டு அதனை அடக்கினர். காளைகளின் திமிலை பிடித்து அடக்கிய வீரர்களுக்கு பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. அதேபோல் நன்றாக விளையாட்டு காட்டி வீரர்களுக்கு போக்கு காட்டிய காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 3 ஆண்டுகளுக்கு பிறகு நத்தமாடிபட்டியில் நடந்த இப்போட்டியை காண பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். இந்த போட்டியில் காளைகள் முட்டியதிலும், வேடிக்கை பார்த்தவர்களும் சேர்த்து 15 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அதே இடத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சை தேவைப்பட்டவர்களுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து