முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏர் இந்தியா பங்குகளை விற்க முடிவு

புதன்கிழமை, 17 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

கடும் நிதி நெருக்கடியிலும், 2007-ம் ஆண்டிலிருந்து தொடர் நஷ்டத்திலும் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

சில விமான போக்குவரத்து நிறுவனங்கள் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை வாங்க விரும்பினாலும் அதற்குரிய கடன் பொறுப்புகள் மிகுந்த அச்சுறுத்தலாக இருந்தன. இதைக் கருத்தில் கொண்ட அரசு தற்போது புதிய உத்தியை வகுத்துள்ளது. இதன்படி ஏர் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனங்களை நான்கு நிறுவனங்களாக பிரித்து அவற்றின் 51 சதவீத பங்குகளை பிற நிறுவனங்களுக்கு விற்க முடிவு செய்துள்ளதாக சிவில் விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து