முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய கட்சி தொடங்குவதை நள்ளிரவில் அறிவித்தது ஏன்? நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழிசை கேள்வி

புதன்கிழமை, 17 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி மாதம் 21ம் தேதி அரசியல் பயணத்தை தொடங்கி அன்றே புதிய கட்சி பெயரை அறிவிக்கப் போவதாக நேற்று முன்தினம் நள்ளிரவு அறிவிப்பு வெளியிட்டார். புதிய கட்சி அறிவிப்பை நடிகர் கமல் நள்ளிரவில் வெளியிட்டது ஏன் என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பினார்.

சென்னை விமான நிலையத்தில்  தமிழிசை நிருபர்களிடம் கூறுகையில், நடு இரவில் ஒரு அறிவிப்பு வந்திருக்கிறது. கமல் கட்சி தொடங்கப் போகிறேன் என்றெல்லாம் சொல்லி இருந்தார். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம். ஏன் திடீரென்று இரவு நேரத்தில் இந்த அறிவிப்பு என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் ஒருவர் புதிய முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

அதற்கு எனது வாழ்த்துக்கள். அதே நேரத்தில் அவர் அரசியலில் இறங்கட்டும். மக்கள் பிரச்சினையை எந்தளவிற்கு எடுத்து செல்கிறார். அரசியலில் எவ்வளவு தீவிரமாக ஈடுபடுகிறார் என்பதையெல்லாம் முழுமையாக பார்த்து விட்டுத்தான் எங்களால் கருத்து சொல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து