முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களை உற்சாகமூட்ட 230 பேர் கொண்ட குழு வடகொரியா அனுப்பி வைக்க முடிவு

வியாழக்கிழமை, 18 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

பியாங்கியாங்: தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தங்கள் நாட்டு வீரர்களை உற்சாகமூட்ட 230 நபர்களை கொண்ட ஊக்கமளிக்கும் குழுவை வடகொரியா அனுப்ப திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து வடகொரியா அதிகாரிகள் தரப்பில், ''தென்கொரியாவில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் எங்கள் நாட்டு வீரர்களுக்கும் ஊக்கமளிக்கவும், உற்சாகப்படுத்தவும் 230 பேரை கொண்ட குழுவை அனுப்ப திட்டமிட்டுள்ளோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தென்கொரியா, வடகொரியா இடையே போர் பதற்றம் நிலவி வந்த சூழலில் தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க வடகொரிய அதிபர் விருப்பம் தெரிவித்தார்.

தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தங்கள் நாட்டு வீரர்களை உற்சாகமூட்ட 230 நபர்களை கொண்ட ஊக்கமளிக்கும் குழுவை வடகொரியா அனுப்ப திட்டமிட்டுள்ளது.

இந்தநிலையில் இது தொடர்பாக தென் கொரியா - வடகொரியா பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இதன் முடிவில் வடகொரியா குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து