முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

660 பேருக்கு ரூ.45லட்சம்மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்

வியாழக்கிழமை, 18 ஜனவரி 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம்,பேரையூர் தாலுகாக்களில் நடைபெற்ற தமிழக அரசின் மக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் மூலம் பயனாளிகள் 660பேருக்கு ரூ.45லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் மற்றும் பேரையூர் தாலுகாக்களுக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்களை நடத்தி பொதுமக்களின் பல்வேறு விதமான கோரிக்கைகளை நிறைவேற்றிடும் வகையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை  அமைச்சரும்,கழக அம்மா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.இதன் ஒருபகுதியாக கள்ளிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட செங்கப்படை,கரிசல்காளம்பட்டி, நேசநேரி,சிவரக்கோட்டை,கே.வெள்ளாகுளம் உள்ளிட்ட பல கிராமங்களில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் வெகுசிறப்பாக நடைபெற்றது.திருமங்கலம் தொகுதி மக்களின் நலன் கருதி நடைபெற்ற இந்த முகாம்களின் திறப்பு விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரும்,கழக அம்மா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு தலைமையேற்று முகாம்களை திறந்து வைத்து முதியோர் உதவித்தொகை,நலத்திட்ட கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதாக உறுதியளித்தார்.பின்னர் முகாம்களில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கி சிறப்புரையாற்றினார்.
கள்ளிக்குடி ஒன்றியத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்து பேசியதாவது: தமிழகத்திற்கே முன்மாதிரியாக விடுமுறை நாட்களில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்களை நடத்தி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.அம்மாவின் வாக்குறுதிப்படி அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.தற்போது அம்மா இல்லாத நிலையில் நிறையபேர் களமிறங்கியிருக்கிறார்கள்.அவர்கள் தங்களது செயல்திட்டங்களை சொல்லாமல் அம்மா அரசின் மீது பழிகளை சொல்லி தங்களை புதுப்பித்துக் கொள்கிறார்கள்.ஐந்து ஆண்டுகள் உங்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு கொடுத்துள்ளீர்கள்.இந்த ஐந்து ஆண்டுகளில் வாக்குறுதி கொடுத்துள்ள அனைத்து திட்டங்களையும் அம்மாவின் அரசு தலைமேற்கொண்டு செயல்படுத்தும்.தற்போது திருமங்கலம் தொகுதியிலுள்ள திருமங்கலம்,பேரையூர் தாலுகாக்களில் பயனாளிகள் 660பேருக்கு ரூ.45லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்று பேசினார்.
இந்நிகழ்ச்சிகளில் முன்னாள் மதுரை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் எம்.ஜெயராமன்,கழக சிறுபான்மை பிரிவு பொருளாளர் ஜான்மகேந்திரன்,மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம்,இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி, கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் உலகாணி மகாலிங்கம்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன்,ஒன்றிய அம்மா பேரவை தலைவர் சாத்தங்குடி தமிழழகன்,திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் வக்கீல்.அன்பழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி, கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,திருமங்கலம் ஒன்றிய துணைச் செயலாளர் சுகுமார்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் பிரபுசங்கர்,அன்னலட்சுமி,கட்சி நிர்வாகிகள் வெற்றிவேல்,அன்னபூர்ணா தங்கராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து