முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

22-வது தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் பொறுப்பேற்கிறார்

வெள்ளிக்கிழமை, 19 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,  புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் அடுத்த வாரம் பொறுப்பேற்கவுள்ளார்.

21-ஆவது தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி கடந்த ஜூலை மாதம் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் அவரது பதவிக்காலம்  22-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

தேர்தல் ஆணையம் என்பது தலைமை தேர்தல் ஆணையர், இரு தேர்தல் ஆணையர்கள் கொண்ட ஒரு அமைப்பாகும். தலைமை தேர்தல் ஆணையராக இரு தேர்தல் ஆணையர்களில் பதவி மூப்பு அடிப்படையில் உள்ள ஒருவரை ஜனாதிபதி நியமிப்பது வழக்கம். அதன்படி தேர்தல் ஆணையர்களாக உள்ள ஓம் பிரகாஷ் ராவத், சுனில் அரோரா ஆகியோரில் ராவத் மூத்த அதிகாரியாவார். அவரை தலைமை தேர்தல் ஆணையராக  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். இதையடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் அடுத்த வாரம் பொறுப்பேற்கவுள்ளார். இவர் 22-ஆவது தலைமை தேர்தல் ஆணையராவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து