முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எங்கள் பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்த அமெரிக்க போர்க்கப்பல்: சீனா குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்: அமெரிக்க போர் கப்பல் ஒன்று எங்கள் பிராந்தியப் பகுதியில் அனுமதியின்றி நுழைந்ததாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில், "கடந்த ஜனவரி 17-ம் தேதி அமெரிக்க போர் கப்பல் ஒன்று எங்கள் பிராந்தியத்துக்குட்பட்ட ஹுவாங்யன் பகுதியில் அனுமதி இல்லாமல் நுழைந்துள்ளது. இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹுவாங்யன் தீவு, ஸ்கார்பாரோ ஷோல் என்றும் அழைக்கப்படுகிறது, தென்சீனக் கடலில் உள்ள இப்பிரதேசம் பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவால் உரிமை கோரப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய பிரதேசமாகும்.
அமெரிக்க போர் கப்பல் ஒன்று எங்கள் பிராந்தியப் பகுதியில் அனுமதியின்றி நுழைந்ததாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.

இதே போன்று கடந்த ஆண்டு மே மாதம் தென் சீனக் கடலில் அமெரிக்க போர் கப்பல் ஒன்று நுழைந்ததாக சீனா குற்றம் சாட்டியிருந்தது. இந்த நிலையில் மீண்டும் சீனாவின் எல்லைப் புறத்தில் அமெரிக்க போர் கப்பல் நுழைந்துள்ளது.

2017-ம் ஆண்டு முதல் அமெரிக்கா சீனாவுடன் நட்புறவை ஏற்படுத்த டிரம்ப் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. வடகொரியாவின் தொடர் அணுஆயுத ஏவுகணை சோதனைகளால் ஏற்பட்ட கொரிய தீபகற்ப பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியில் இரு நாடுகளும் இணைந்து ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து