எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் : மறைந்த முதல்வர் அம்மாவின் வழியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் உயர பாடுபட்டு வருகின்றனர் என்று திண்டுக்கல்லில் நடந்த கல்லூரி விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
திண்டுக்கல் நொச்சியோடைப்பட்டி அனுகிரஹா அறிவியல் கல்லூரியில் பேரிடர் மேலாண்மையை நாம் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்த தேசிய அளவிலான பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் ஐசக் வரவேற்றார். துணை முதல்வர் சூசைமாணிக்கம், சேர்மன் அருமைநாதன், கல்லூரி செயலாளர் லாரன்ஸ், பேராசிரியர் வில்லியம்ஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பெங்களூர் நிமன்ஸ் நிறுவனமும், அனுகிரஹா அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்திய இம்முகாமில் பல கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
மாணவ, மாணவிகளை வாழ்த்தி பாராட்டி வருவாய்த்துறை அமைச்சரும், பேரிடர் மேலாண்மை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் சிறப்புரையாற்றுகையில், பேரிடர் ஏற்படும் போது அதனை எதிர்கொள்வது எப்படி என்பதை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். முன்பெல்லாம் எப்போதாவது தான் சுனாமி, நிலச்சரிவு போன்ற பேரிடர் ஏற்படும். ஆனால் சமீபகாலமாக இவை அதிகரித்துள்ளது. தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழையின் போது 48 சதவீதம் மழை பெய்யும். தென்மேற்கு பருவமழை மூலமாக 32 சதவீதம் மழை பெய்யும். இதன்மூலம் பெறக்கூடிய தண்ணீரை வைத்துத்தான் குடிஞிர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. சரியான மழைப்பொழிவு கிடைக்காவிட்டால் வறட்சி ஏற்படும்.
சில நேரங்களில் பேரிடர் நிகழ்வு ஏற்படுகிறது. அதனைத் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. அதில் தாழ்வான பாதிக்கப்பட்ட பகுதி. பாதிக்கப்படக்கூடிய சூழல் உள்ள பகுதி உள்ளிட்ட 5 வகையாக அடையாளம் கண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வானிலை அறிக்கை கிடைத்தவுடன் மக்களுக்கு தேவையான நிவாரணமும் பாதுகாப்பு முகாம்களும் ஏற்படுத்தப்பட்டு உணவு, உடை ஆகியவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பேரிடரின் போது மக்களின் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதிசெய்யப்பட வேண்டும்.
அம்மாவின் ஆட்சியில் சுனாமி பேரலை ஏற்பட்ட போது அவரது துரித நடவடிக்கையால் மீட்பு பணிகளை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு மக்கள் இயல்புநிலைக்கு திரும்பினர். இவ்வாறு செய்த நடவடிக்கையை மற்ற மாவட்டங்களுக்கும், பிற நாடுகளுக்கும் பயிற்சி அளிக்க வேண்டுமென உத்தரவிட்டார். அதன்படி பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடலோர 13 மாவட்டங்களில் அடிக்கடி பேரிடர் ஏற்படுகின்ற காரணத்தால் முதல்நிலை காவலர்களாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியை நன்கு அறிந்தவர்களே இப்பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு அரசு சார்பில் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
மேலும் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், மாணவர்கள் மட்டுமின்றி மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அரசு பயிற்சி அளித்து வருகிறது.
வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டால் நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அம்மாவின் ஆட்சியில் தான் முதன் முதலாக வறட்சிக்கும் நிவாரணம் வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்வித்துறைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்தார். மாணவர்களுக்கு தேவையான 16 கல்வி உபகரணங்களை அம்மா வழங்கினார்.
தொலைநோக்கு திட்டத்தோடு மாணவர்களின் நலன் கருதி அம்மா திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார். தனிநபர் வருமானம் உயர வேண்டும் என்பதற்காகவும் அம்மா திட்டங்களை அறிவித்தார். அம்மாவின் வழியில் தமிழக முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மாணவர் சமுதாயம் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரும் வாழ்வில் மென்மேலும் உயர வேண்டும் என்பதற்காக பாடுபட்டு வருகின்றனர் என்று பேசினார்.
அதன்பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டியில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் லாப நோக்கோடு செயல்படுத்தப்படுவதில்லை. மக்களின் சேவைக்காகவே போக்குவரத்து கழகங்கள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக கிராம மக்கள் தங்குதடையின்றி செல்வதற்கு சாலை வசதி, புதிய பேருந்து வசதி, புதிய வழித்தடங்கள் உருவாக்குதல் போன்றவை உருவாக்கப்பட்டு வருகிறது. கடந்த 6 ஆண்டுகளாக அண்டை மாநிலங்களில் போக்குவரத்து கட்டணம் பலமுறை மாற்றி உயர்த்தியுள்ளனர்.
ஆனால் தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக கட்டணம் உயர்த்தப்படவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள டீசல் விலையேற்றத்தின் காரணமாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து கழகம் நலிந்து விடக்கூடாது. அதனைக் காப்பாற்ற வேண்டும். பொதுமக்களுக்கு சிறந்ததொரு சேவை அளிக்க வேண்டும் என்பதாலேயே முதல்வரும், துணை முதல்வரும் பல்வேறு கட்டங்களாக ஆய்வு செய்து கட்டண உயர்வை அறிவித்துள்ளனர் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.