முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துருக்கியில் பயணிகள் பஸ் விபத்து: 11 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

அங்காரா : துருக்கியில் பயணிகள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியாகினர். 46 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து துருக்கி அதிகாரிகள் தரப்பில், ''துருக்கி தலைநகர் அங்காராவிலிருந்து மேற்குப் பகுதியிலுள்ள புர்சா நகருக்கு பயணிகளுடன் சென்ற பேருந்து நேற்று விபத்துக்குள்ளானது. இதில் 11 பேர் பலியாகினர். 46 பேர் காயமடைந்தனர். பேருந்தில் பயணம் செய்தவர்கள் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். துருக்கியைப் பொருத்தவரை அங்கு சாலை விபத்துகள் ஏற்படுவது சமீபகாலமக அதிகரித்து வருகிறது. 2016-ல் மட்டும் துருக்கில் சாலை விபத்தில் 7,000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து