முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைரமுத்து மன்னிப்பு கேட்க கோரி அருப்புக்கோட்டையில் கன்டன பேரணி ஆர்பாட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜனவரி 2018      விருதுநகர்
Image Unavailable

அருப்புக்கோட்டை, - அருப்புக்கோட்டையில் ஆண்டாள் பற்றி இழிவாக பேசிய கவிஞர் வைரமுத்துவை ஆண்டாள் கோவில் முன்பு மண்ணிப்பு கேட்க கோரி இந்து அமைப்புகள் சார்பாக கண்டன ஆர்பாட்டம்; நடைபெற்றது.
 அருப்புக்கோட்டையில் இந்து அமைப்புகள் சார்பாக நடைபெற்ற கன்டன பேரணி மற்றும் ஆர்பாட்டத்திற்கு இந்து முன்னனி மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் பி.ஜே.பி எஸ்.சி பிரிவு மாநில செயலாளர் வெற்றிவேல் முன்னிலையில் நடைபெற்றது.  பேரணி விருதுநகர் ரோட்டில் உள்ள ஆயிரங்கண் மாரியம்மனி கோவிலில் இருந்து புறப்பட்டு மரக்கடை பஸ் டாப்பில் நிறைவுற்றது.  அங்கு நடந்த ஆர்பாட்டத்தில் ஆண்டாளை பற்றி அவதூராக பேசிய வைரமுத்துவை ஆண்டாள் கோவில் முன்பு மன்னிப்பு கேட்க்கக்கோரி இந்து அமைப்பு நிர்வாகிகள் கன்டன உரையாற்றினார்கள்.  நிகழ்ச்சியில் இந்து முன்னனி நகர செய்தி தொடர்பாளர் பொன் முனியசாமி மற்றும் பிற நிர்வாகிகள் ஜெயராஜ், சந்திரகுமார் மற்றும் ஹரேராமா, ஹரேகிருஷ்ணா நிர்வாகிகள் உட்பட திரளாக கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து