முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க எம்.பி தேர்தலில் இந்திய அமெரிக்கர் போட்டி

திங்கட்கிழமை, 22 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் :  அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவைக்கான (எம்.பி.) தேர்தலில் இந்திய அமெரிக்கர் டீப் சரண் (45) போட்டியிட உள்ளார்.

வர்ஜினியா மாகாணத்தில் உள்ள 11 மாவட்டங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் சரண் உட்பட 11 பேர் போட்டியிடுகின்றனர்.

10-வது மாவட்டத்தில் குடியரசு கட்சியின் சார்பில் 2-வது முறையாக உறுப்பினராக உள்ள பார்பரா காம்ஸ்டாக்கை எதிர்த்து சரண் போட்டியிடுகிறார்.

இதுகுறித்து சரண் கூறியபோது, “இப்போது, ஆசிரியராக, பள்ளிக்கூட நிறுவனராக, வழக்கறிஞராக உள்ளேன். தேர்தலில் வெற்றி பெற்றால் கல்வித் துறையின் மேம்பாட்டுக்கு பாடுபடுவேன். வெளிநாட்டிலிருந்து குடியேறியவன் என்ற வகையில் இன சகிப்பின்மையை எதிர்த்து போராடுவேன்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து