முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பங்குச்சந்தைகள் மீண்டும் புதிய உச்சம்

திங்கட்கிழமை, 22 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

இந்திய பங்குச்சந்தைகள் நேற்று மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 35,664 புள்ளிகளை கடந்தது. அதுபோலவே தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 10,926 புள்ளிகளை தொட்டது. இதன் மூலம் முந்தைய சாதனைகளை கடந்து இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை கண்டுள்ளன.

ஓஎன்ஜிசி, எச்டிஎப்சி வங்கி யெஸ் பாங்க், அதானி போர்ட்ஸ், கோல் இந்தியா, ஹீரோ மோட்டர்ஸ், டாடா மோட்டர்ஸ் பஜாஜ் ஆட்டோ, பவர் கீரிடு உள்ளிட்ட நிறுவன பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் அதிகம் உயர்ந்தன. இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை பங்குச்சந்தைகள் அதிகம் உயர்ந்த நிலையில், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 988.25 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளன. உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 209.86 கோடி ரூபாய் மதிப்பாலன பங்குகளை வாங்கியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து