முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல்லில் இந்து சமய பேரவை சார்பில் பொங்கல் விழா _ அமைச்சர் சி.சீனிவாசன் பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 23 ஜனவரி 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல்,-திண்டுக்கல்லில் இந்து சமய பேரவை சார்பில் நடந்த சமய நல்லிணக்க பொங்கல் விழாவில் அமைச்சர் சி.சீனிவாசன் பங்கேற்றார்.
திண்டுக்கல்லில் இந்து சமய பேரவை சார்பில் பொங்கல் விழா சமய நல்லிணக்க விழாவாக வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தவருடம் நடந்த விழாவையொட்டி புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஜி.டி.என். கலைக்கல்லூரி முதன்மை செயல் அலுவலர் ரத்தினம் அனைவரையும் வரவேற்றார். திருவருட் பேரவை தலைவர் எஸ்.கே.சி.குப்புசாமி தலைமை வகித்தார். விழாவில் வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி, கவிஞர் பா.விஜய். நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுக்களும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
விழாவில் அ.தி.மு.க. மாவட்ட கழக செயலாளர் மருதராஜ், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன், பகுதி செயலாளர்கள் மோகன், சேசு, சுப்பிரமணி, அரசு வழக்கறிஞர்கள் பழனிச்சாமி, மனோகரன், தொழிலதிபர்கள் நாட்டாமை காஜா மைதீன், கே.ஏ.ஆர்.மைதீன், பாலபாரதி, திருவருட் பேரவை செயலாளர் திஞீர்சியஸ், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி பங்குத்தந்தையர்கள் ஜான்  பிரகாசம், செல்வராஜ், சாம்சன், பத்திரிகையாளர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து