எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடந்தது.
1950-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் நாள் இந்திய தேர்தல் ஆணையம் துவங்கப்பட்ட நாளாகும். பொதுமக்களிடத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தும் வகையில் இத்தினத்தினை தேசிய வாக்காளர் தினமாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ராமநாதபுரம் கலெக்டர் முனைவர் நடராஜன் ராமநாதபுரம் அரண்மனை வளாகத்திலிருந்து கல்லூரி மாணவிகள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்து பங்கேற்றார். இப்பேரணியில் ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியைச் சார்ந்த 500 மாணவிகள் கலந்து கொண்டு வாக்காளர் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திய படி பேரணியாகச் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இப்பேரணியானது அரண்மனை வளாகத்தில் இருந்து துவங்கி வண்டிக்காரத் தெரு, வழிவிடு முருகன் கோவில் வழியாக ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்று தேசிய வாக்காளர் தின உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர். அதன்பின்பு ராமநாதபுரம் அருகேயுள்ள தெற்குத் தரவை கிராமத்தில் 101 வயது பூர்த்தியடைந்த முதிய வாக்காளரான ச.ஹவ்வாம்மாள் என்பவருக்கு கலெக்டர் நேரில் சென்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
அதன்பின்பு ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக அரசினர் பொறியியல் கல்லூரியில்; நடைபெற்ற தேசிய வாக்காளர் தின விழாவில் மாவட்ட கலெக்டர் தலைமையேற்று வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்டுள்ள இளைஞர்களுக்கு புதிய வண்ணப்புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகளையும், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ‘அனைவரும் அணுகத்தகுந்த தேர்தல்கள்” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:- நமது தேசம், மக்களை ஆளுகின்ற தலைவர்களை மக்களே ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கும் வகையில் மக்களாட்சி முறையை பின்பற்றும் தேசமாகும். இத்தகைய மக்களாட்சி முறையில் வலிமையான ஜனநாயகத்திற்கு ஒவ்வொரு வாக்காளரும் தங்களது பொறுப்பை உணர்ந்து தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது அவசியமாகும். குறிப்பாக 18 வயது பூர்த்தியானவர்கள் அனைவரும் வாக்காளர் பெயர் பட்டியலில் தங்களது பெயர்களை தவறாமல் பதிவு செய்திட வேண்டும். அதேவேளையில் வயது முதிர்ந்த பெரியோர்கள் தாமாக முன்வந்து ஆர்வமுடன் வாக்களிக்க ஏதுவான சூழ்நிலையினை ஏற்படுத்திட வேண்டும்.
அந்த வகையில் இன்றைய தினம் தெற்குத்தரவை பகுதியில் 101 வயது பூர்த்தியடைந்த அம்மையாருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தப்பட்டது. அதேபோல மாவட்டத்தில் மொத்தம் 10க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் 100 வயது கடந்த வாக்காளர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரையும் அந்தந்த பகுதிகளில் கௌரவித்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்தலின்போது எவ்வித அச்சமின்றியும், மத, இன மற்றும் மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமல் எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்பது ஒவ்வொரு வாக்காளரின் கடமையாகும். இவ்வாறு பேசினார். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரா.பேபி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, நகராட்சி ஆணையாளர் நடராஜன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பி.மணிராஜ், தேர்தல் வட்டாட்சியர் நித்யானந்தம், ராமநாதபுரம் வருவாய் வட்டாட்சியர் சண்முகசுந்தரம், அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் சித்திரைவேல் உள்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.