முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆணையாளர் அனீஷ் சேகர், தலைமையில் மதுரை மாநகராட்சியில் தேசிய வாக்காளர் தினம் உறுதிமொழி

வெள்ளிக்கிழமை, 26 ஜனவரி 2018      மதுரை
Image Unavailable

மதுரை.-மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற வாக்காளர் தின உறுதிமொழி ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்,  தலைமையில்   எடுத்துக் கொள்ளப்பட்டது.
நேர்மையாக வாக்களிக்க வாக்காளர்களின் உறுதிமொழி
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல் மாண்பையும் நிலை நிறுத்துவோம் என்றும், மேலும், ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் நேர்மையாக சிந்தித்து வாக்களிப்போம் என்றும் உளமார உறுதி ஏற்கிறோம்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் (கணக்கு) திரு.குமார், உதவி ஆணையாளர் (வருவாய்)  ஆ.ரெங்க ராஜன், மக்கள் தொடர்பு அலுவலர்  சித்திரவேல், கல்வி அலுவலர்  .ராஜேந்திரன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து