முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ஓபன் பேட்மிண்டன்: சாய் பிரனீத், சாய்னா நேவால் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

புதன்கிழமை, 31 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : டெல்லியில் நடைபெற்று வரும் இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாய் பிரனீத், சாய்னா நேவால் ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

2-வது சுற்றுக்கு...

இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நேற்று தொடங்கி வருகிற 4-ம் தேதி வரை நடக்கிறது. நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் சாய் பிரனீத்தும், இங்கிலாந்தின் ராஜிவ் அவுசப்பும் மோதினர். இதன் முதல் சுற்றை சாய் பிரனீத் 21-11 என எளிதாக கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டை 21-17 என ராஜிவ் கைப்பற்றினார். அதன்பின் நடைபெற்ற மூன்றாவது செட்டில் இரு வீரர்களும் சிறப்பாக விளையாடினர். இந்த செட்டை 21-17 என சாய் பிரனீத் கைப்பற்றினார். இதன்மூலம் 21-11, 17-21, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற சாய் பிரனீத் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

பிரனோய் தொடரைவிட்டு...

அதைத்தொடர்ந்து நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவாலும், டென்மார்க்கின் சோபி ஹோம்போ தாலும் மோதினர். இப்போட்டியில், அதிரடியாக விளையாடிய சாய்னா, முதல் இரண்டு செட்களையும் 21-15, 21-9 என்ற நேர் செட்களில் கைப்பற்றினார். இதன் மூலம் வெற்றி பெற்ற சாய்னா இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். முன்னதாக நடைபெற்ற மற்றொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரரான எச்.எஸ். பிரனோயும், மற்றொரு இந்திய வீரரான சித்தார்தா ஜெய்ஸ்வாலும் மோதினர். இப்போட்டியில் 21-4, 21-6 என்ற நேர் செட்களில் சித்தார்தா ஜெய்ஸ்வால் வெற்றி பெற்றார். இதன்மூலம் பிரனோய் தொடரைவிட்டு வெளியேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து