முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கலெக்டர்மு.ஆசியா மரியம் அலுவலர்களுக்கு உத்தரவு

திங்கட்கிழமை, 5 பெப்ரவரி 2018      நாமக்கல்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (05.02.2018) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையேற்று பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான நபர்களுக்கு உரிய நலத்திட்ட உதவிகளை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

உடனடிநடவடிக்கை

இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா வேண்டியும், வங்கி கடன் உதவி வேண்டியும், குடிசை மாற்று வாரியத்தில் வீடு வேண்டியும், குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மொத்தம் 317 மனுக்கள் வரப்பெற்றன.

அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்.

 

தேசிய அடையாள அட்டை

மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.20,000 மதிப்பிலான நவீன செயற்கை கால் அவைத்தினையும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1500 வீதம் ரூ.3,000 மதிப்பிலான நவீன மடக்கு குச்சிகளையும், 1 தொழு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 1 நபருக்கு மாதம் ரூ.1500 வீதம் ஆண்டுக்கு ரூ.18,000- பராமரிப்பு உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு ஆணையினையும், 11 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகளையும் என இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.41,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்.

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிசாமி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) எம்.துரை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் க.சுப்ரமணி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து