எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவில்பட்டியில் உள்ள விசுவகர்ம பள்ளி முன்பு அமைக்கபட்ட திருவள்ளுவர் திடலில் ஏழை பேராசிரியர், தமிழ் உணர்வு உள்ள மண்ணின் மைந்தர் அறிஞர் சங்கரவள்ளிநாயகம் அவர்களின் தொடர்முயற்ச்சியால் உருவாக்கபட்ட திருவள்ளுவர் மன்றத்தின் 46ம் ஆண்டு நிறைவு விழா அவரின் தமிழ் இலக்கிய வாரிசுகள், மாணக்கர்களால் விடாமுயற்ச்சியின் பொருட்டு கடந்த 2 நாள்களாக நடைபெற்று வருகிறது.
திருவள்ளுவர் மன்றத்தின் 46ம் ஆண்டு நிறைவு விழா
பலவேறு தமிழ்இன விரோதிகளால் ஏற்படுத்தபட்ட தடைகளையும் மீறி நடந்த விழாவுக்கு தலைவர் கருத்தபாண்டி தலைமை வகித்தார். துணைதலைவர் திருமலை முத்துசாமி, செயலாளர் நம்.சீனிவாசன், இணைசெயலாளர் சான்கணேசு, பொருளாளர் முத்துராசு, தணிக்கையாணர் அந்தோணிராசு, வழக்கறிஞர் பரமசிவம், நெறிபடுத்துனர்கள் இலக்குமணபெருமாள், பரமசிவம், விநாயகாரமேசு, ஆகியோர்களின் கடும் முயற்ச்சியால் நடந்த நிகழ்வில் இறுதி நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தலைமை ஏற்று பேசுகையில் தமிழகத்தில் முதன் முதலாக சென்னையில் பேரறிஞர் உலக தமிழ் மாநாட்டினை நடத்தினர், அவரை வழியில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜீ.ஆர், சங்கம் வளர்த்த மதுரையில் 1981ல் 5வது உலக தமிழ் மாநாட்டை நடத்தி , தஞ்சையில் தமிழ்பல்கலைக்கழகம் நிறுவி பெருமை சேர்த்தார். அதே வழியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தஞ்சையில் உலக தமிழ்மாநாட்டினை நடத்தி, நான்காம் தமிழாம் அறிவியல் தமிழை அறிமுகப்படுத்தினர். அந்த வழியில் தான் நாங்களும் தமிழ் உணர்வோடு வந்த காரணத்தினால், பெயரளவில் தமிழ் உச்சரிப்பது மட்டுமல்லமால், அம்மாவின் அரசினை நடத்தி கொண்டு இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், ஹார்டுபல்கலைகழகத்தில் தமிழ் இருக்கைகள் அமைக்க வேண்டும் என்பதற்காக 10கோடி ரூபாய் வழங்கி தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளது அம்மாவின் அரசு என்பதனை பெருமையுடன் கோடிட்டு காண்பிக்க விரும்புகிறேன். அதன் பிறகு தான் தமிழ் அறிஞர்கள், தமி@ழ் ஆர்வலர்கள் நிதி உதவி வழங்கி வருகின்றனர். ஒரு மனிதன் தனது வாழ்க்கை நெறியை செம்மைபடுத்தி கொள்ள தெய்வபுலவர் திருவள்ளுவரின் திருக்குறளை பின்பற்றினால் போதும் என்று எடுத்துரைத்து மட்டுமின்றி, உலகம் முழுவதும் தமிழ் பரவ வேண்டும், திருக்குறளின் பெருமையை மற்றவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கிரேக்கம், லத்தீன் உள்ளிட்ட பல்வேறு உலக மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்க்க ரூ. 5கோடி ரூபயாய் ஒதுக்கி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டது மட்டுமின்றி அதனை செயல்படுத்தி பெருமையை சேர்த்தார். அது மட்டுமல்லாது பாரதிய ஜனதாகட்சியை சேர்ந்த எம்.பி. தருண் விஜய், திருவள்ளுவர் சிலையை கன்னியாகுமாரியில் இருந்து கொண்டு சென்ற போது, சென்னையி@ல் நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் சார்பில் 2 அமைச்சர்களையும் பங்கேற்க வைத்தது மட்டுமின்றி, அந்த சிலையை பாதுகாப்புடன் கொண்டு சேர்க்கும் பணியும் ஜெயலலிதா செய்ய உத்தரவுபிறப்பித்து செயல்படுத்தி காட்டினார். தமிழுக்கு பெருமை சேர்ந்த திருவள்ளுவரின் பெருமைக்கு புகழ் சேர்க்கும் விதத்தில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. அதே பணியை கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற சிறப்பாக செய்து வருகிறது. இதன் 50வது பொன்விழா ஆண்டில் உலகில் உள்ள தமிழ் அறிஞர்களை கோவில்பட்டி வரழைத்து, மிகப்பெரிய அளிவில் நடத்திட என்னால் முடிந்த உதவிகளை,நான் எந்த நிலையில் இருந்தாலும் உறுதியாக செய்வேன் மேலும் தமிழுக்கு பெருமைசேர்த்த எனது ஏழை பேராசிரிய பெருந்தகை ஐயா அறிஞர் சங்கரவள்ளிநாயகம் அவர்களுக்கும், தமிழுக்கும், திருவள்ளுவருக்கும் அதிமுக அரசு என்றும் பெருமை சேர்க்கும் என்றார். இதனை தொடர்ந்து அதிமுக செய்தி தொடர்பாளார் வைகைச்செல்வன் வள்ளுவம் என்ற வாழ்வியல் அறம் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதையெடுத்து வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரி முன்னாள் முதல்வர் அப்துல்காதர் தலைமையில் சிந்தனைப்பட்டிமன்றம் நடைபெற்றது. விழாவில் திருவள்ளுவர் மன்ற தலைவர் கருத்தப்பாண்டி, புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லெட்சுமணப்பெருமாள், தொழில் அதிபர் எம்.எஸ்.எஸ்.வி.பாபு, இந்திய மருத்துவ கழக தலைவர் டாக்டர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருக்குறள் ஒப்புவித்தலில் அசத்திய மாணவிகள்: திருவள்ளுவர் மன்ற 46ஆம் ஆண்டு நிறைவு விழாவின் 2ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்டம், சாத்தூரையடுத்த ந.சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியில் பயின்று வரும் 8ஆம் வகுப்பு மாணவி ரா.பிருந்தாலட்சுமி மற்றும் அதே பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவி ர.நாகஜோதி ஆகிய இருவரும் 1,330 திருக்குறளையும் ஒப்புவித்தனர்.மேலும், விழாவில் பங்கேற்ற ஆர்வலர்கள் திருக்குறள் அதிகாரத்தின் தலைப்பை குறிப்பிட்டு கேட்டாலும், திருக்குறளின் வரிசை எண்ணை குறிப்பிட்டு கேட்டாலும் மாணவிகள் அந்த திருக்குறளை அடிபிறழாமல் ஒப்புவித்தது விழாவில் பங்கேற்ற அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, திருக்குறளை ஒப்புவித்த மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.