முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளை பலாத்காரம் செய்ய முயன்றதால் அடித்து கொன்றோம் பென்னாகரம் வாலிபர் கொலை வழக்கில் புது தகவல்: தந்தை உள்பட 4 பேர் கைது: பரபரப்பு வாக்குமூலம்

செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2018      தர்மபுரி

பென்னாகரம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார்.  வழக்கில் சிறுமியின் தந்தை உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   போலீஸில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

வாக்குமூலம்

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் பருவதனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் என்ற பீமன் (37).  கூலி தொழிலாளி இவருக்கு 15 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது.  மனைவி பிரிந்து சென்றுவிட்டதால் தந்தையுடன் வசித்து வந்த பெருமாள் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி விட்டு அடிக்கடி ஊர்மக்களிடையே தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோடியூர் அரசு பள்ளி வளாகத்தில் பெருமாள் மர்மமான முறையில் கொலையாகி கிடந்தார்.  பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் போலிஸ்சார் அவரது உடலை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  கொலை செய்தது யார்? என்பது குறித்து கோடியூர் கிராம மக்களிடத்திளும், அவரின் உறவினர்களிடத்திலும் போலிசார் விசாரித்தனர்.  அப்போது 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றதால் அந்த சிறுமியின் உறவினர்கள் பெருமாளை அடித்து கொன்றிருக்கலாம் என்ற தகவல் கிடைத்தது. 

அதனடிப்படையில் சிறுமியின், தந்தை சக்திவேலை (34) பிடித்து போலீசார் விசாரித்தனர்.  அப்போது பெருமாளை கட்டையால் தாக்கி கொன்றேன் என ஒப்புக்கொண்டார்.  அவர் அளித்த வாக்குமூலம் பற்றி போலிசார் கூறியதாவது; பாலக்கோடு அருகே திருமல்வாடியில் சக்திவேல் வசிக்கிறார்.  கோடியூரில் உள்ள தாத்தா வீட்டில் அவரது 9 வயது மகள் தங்கியிருந்து அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்துள்ளார்.  பள்ளிக்கு செல்லும் போதும், வரும் போதும் கண்காணித்து வந்த பெருமாள் அவருக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.  நேற்று முந்தினம் சிறுமியை தனியாக அழைத்து சென்று பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.  இதுபற்றிய தகவல் கோடியூரில் உள்ள உறவினர்கள் மூலம் சக்திவேலுக்கு தெரியவந்தது. 

4 பேர் கைது

அவர் தம்பி முருகன் (30) மற்றும் உறவினர்கள் அருண் (28), கமலேசன் (34) ஆகியோரிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார்.  இதனால் பெருமாளை அடித்து கொன்று விட வேண்டும் என்ற நோக்கில் பாலக்கோட்டில் இருந்து ஒரு காரில் சக்திவேல், முருகன், அருண், கமலேசன் ஆகிய 4 பேரும் கோடியூர் வந்தனர்.  அங்குள்ள அரசு பள்ளி அருகே நின்று கொண்டிருந்த பெருமாளை உருட்டு கட்டையால் சராமரியாக தாக்கினர்.  இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.  சம்பவ இடத்திலேயே பலியானார்.  அதன்பின் 4 பேரும் தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து சக்திவேல் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் பென்னாகரம் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து