முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டியில் ரூ.38 லட்சம் மதிப்பில் நுண் உரம் செயலாக்க மையம் அமைக்கும் பணி கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 7 பெப்ரவரி 2018      நீலகிரி
Image Unavailable

ஊட்டியில் ரூ.38.70 லட்சம் மதிப்பில் நுண்உரம் செயலாக்க மையம் அமைக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

தினமும் 3 டன்

ஊட்டி நகராட்சிக்குட்பட்ட காந்தள் முக்கோணம் பகுதியில் உள்ள மைதானத்தில் நகராட்சியின் சார்பில் நுண்உரம் செயலாக்க மையம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் கலந்து கொண்டு சேவை மையம் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்து கூறியதாவது-ஊட்டி நகராட்சி மூலம் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகள் இப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டு அது பிரிக்கப்பட்டு தொட்டிகளில் உலர்த்தப்பட்டு மாட்டு சாணம் மற்றும் இஎம் சொலுசன் தெளித்து உரம் தயார் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நுண் உரம் செயலாக்க மையம் ரூ.38.70 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. இந்த மையம் செயல்பாட்டிற்கு வந்த உடன் தினமும் 3 டன் மக்கும் உரம் தயார் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் குப்பைகளிலிருந்து பிரிக்கப்படும் பிளாஸ்டிக் மற்றும் மக்காத குப்பைகள் தனிதனியாக பிரித்து பிளாஸ்டிக் பொருட்களை உடைத்து அதனை சாலை அமைக்கும் பணிக்கு பயன்படுத்தப்பட உள்ளது என்றார்.

 

இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர்(பொ) ரவி, ஆணையரின் நேர்முக உதவியாளர் ஜஹாங்கீர் பாட்ஷா, நகர்நல அலுவலர் டாக்டர் முரளி சங்கர், சுகாதார ஆய்வாளர் தியாகராஜன், நகராட்சி ஒப்பந்ததாரர் கிருஷ்ணதாஸ் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து