முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல்: தொண்டர்கள் தயாராக சோனியா அறிவுறுத்தல்

வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018      அரசியல்
Image Unavailable

புது டெல்லி, பாராளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடக்க வாய்ப்பு இருப்பதால் காங்கிரஸ் தொண்டர்கள் அதற்கு தயாராக வேண்டும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு பேசினார்.

மத்திய அரசு வெற்று விளம்பர நோக்குடன் செயல்படுகிறது. குறைவான செயல்பாடு, அதிகமான விளம்பரம் என்ற இலக்குடன் செயல்படுகிறது. காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற பின் புதிய உத்வேகத்துடன் கட்சி பயணித்துக் கொண்டிருக்கிறது. ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் இலக்குடன் அனைவரும் பணியாற்ற வேண்டும். முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பு இருப்பதால் அதற்கும் தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும்.

காங்கிரஸ் எம்.பிக்கள் தங்கள் தொகுதிகள் மட்டுமின்றி மற்ற பகுதிகளில் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒத்த கருத்துடைய அனைத்து கட்சிகளையம் அரவணைத்து பாராளுமன்ற தேர்தல் வெற்றியை இலக்காக கொண்டு பணியாற்ற வேண்டும் எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து