முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரட்டாறு நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : அரூர் வரட்டாறு நீர்த்தேக்கத்தில் இருந்து நாளை முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்திலுள்ள 5,108 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

கோரிக்கை...

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வள்ளிமதுரை கிராமம், வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, தருமபுரி மாவட்டம், வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக 10.2.2018 முதல் 30 நாட்களுக்கு, 77.760 மி.கன அடி தண்ணீரைத் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.

5,108 ஏக்கர்...

இதனால், தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்திலுள்ள 5,108 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து