முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூரில் அ.தி.மு.க.சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள்விழா அன்னதானம்-நலஉதவிகள்

வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018      திருப்பூர்
Image Unavailable

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.சார்பில்,ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி அன்னதானம் மற்றும் நலஉதவிகள் வழங்க,மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் முடி செய்யப்பட்டது.
அ.தி.மு.க.பொதுச் செயலாளராக இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள்  விழாவை கொண்டாடுவது குறித்த,திருப்பூர் மாநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் பல்லடம் ரோட்டில் உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து மாவட்ட செயலாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது

அன்னதானம்

அ.தி.மு.க.வின் பொதுசெயலாளராக இருந்து ஒரு கோடி தொண்டர்களின் மனதிலும்,தமிழக முதல்வராக இருந்து தமிழக மக்கள் மனதிலும் நிறைந்து வாழ்ந்து கொண்டிருக்கும்,ஜெயலிலதாவின் 70 வது பிறந்த நாளான  வருகிற 24-ந் தேதி காலை திருப்பூர் புஷ்பா தியேட்டர் சந்திப்பு பகுதியில் கட்சி கொடியேற்று விழாவையும்,காலை 11 மணிமுதல் மாலை 4 மணி வரை திருப்பூர் டவுன் ஹால் மைதானத்தில் அன்னதானமும் நடத்த மாநகர் மாவட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அன்றைய தேதியில் அரசு மருத்துவ மனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மாலையில் தங்க கொலுசு,மோதிரம் வழங்கப்பட உள்ளது. ந்நிகழ்ச்சிகளில் கட்சியின் நிர்வாகிகள்,சார்பு அணிகளின் நிர்வாகிகள் தவறாமல் கலந்துகொள்வதோடு,அன்னதானத்தில் பொதுமக்களை அதிக அளவில் கலந்துகொள்ள அனைத்து நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நல உதவிகள்

மேலும் திருப்பூர் மாவட்ட சட்டமன்ற தொகுதியிலும் தலா 2ஆயிரத்து 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கிளை வாரியாக போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.மாநகர் மாவட்டம் முழுவதும் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை ஒரு மாத காலம் சிறப்பாக கொண்டாடவும் கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு எம்.எஸ்.எம்.ஆனந்தன் கூட்டத்தில் பேசினார்.

கலந்துகொண்டவர்கள்

இக்கூட்டத்தில் அவைத்தலைவர் வெ.பழனிசாமி(முன்னாள் எம்.எல்.ஏ.)எம்.எல்.ஏ.க்கள் விஜயகுமார்,கரைபுதூர் நடராஜன்,நிர்வாகிகள் ஜான்,ராதாகிருஷ்ணன்,கண்ணப்பன்,ஒன்றிய செயலாளர்கள் சிவாசலம்,சேவூர் வேலுசாமி,வேலம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் வி.கே.பி.மணி,திருப்பூர் மாநகர பகுதி செயலாளர்கள் கருணாகரன்,கணேசன்,முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் ஆண்டிபாளையம் ஆனந்தன்,சி.பி.வசந்தாமணி,சின்னசாமி பாசறை ஷாஜஹான் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து