எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜோகன்ஸ்பர்க் : இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி இன்று ஜோகன்ஸ்பர்க் நகரில் நடக்கிறது. தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி வீரர்கள் உள்ளனர். இந்த போட்டியில இந்திய அணி வெற்றிப் பெற்றால் விராட் கோலி தலைமையிலான படை தென்ஆப்பிரிக்க மண்ணில் தொடரை முதலில் கைப்பற்றிய இந்திய அணி என்ற பெருமையை பெறும்.
இந்தியா முன்னிலை...
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 6 ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் மூன்று போட்டி முடிந்துள்ளது. டர்பனில் நடந்த முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், செஞ்சூரியனில் நடந்த 2-வது போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்திலும் கேப்டவுனில் நடந்த 3-வது போட்டியில் 124 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
4-வது ஒருநாள்...
இரு அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி இன்று ஜோகன்ஸ்பர்க் நகரில் நடக்கிறது. இப்போட்டி இந்திய நேரடிப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணி பேட்டிங், பந்து வீச்சில் வலுவான நிலையில் இருக்கிறது. கேப்டன் விராட்கோலி ரன் எந்திரமாக உள்ளார். அவர் 2 சதம் உள்பட 318 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார். அடுத்து தொடக்க வீரர் ஷிகர் தவான் 162 ரன் எடுத்து உள்ளார். மற்றொரு தொடக்க வீரரான ரோகித் சர்மா இன்னும் சொபிக்கவில்லை. இதனால் அவர் ரன் குவிக்கும் கட்டாயத்தில் உள்ளார். ரகானே, பான்ட்யா, டோனி, கேதர் ஜாதவ் போன்ற பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
வென்றதில்லை...
பந்துவீச்சில் சுழற்பந்து கூட்டணியான குல்தீப் யாதவ்-சாஹல் சுழலில் சிக்கி தென்ஆப்பிரிக்கா திணறி வருகிறது. இதுவரை நடந்த 3 போட்டியில் சாஹல் 11 விக்கெட்டும், குல்தீப் 10 விக்கெட்டு என இருவரும் மட்டுமே 21 விக்கெட்டை கைப்பற்றி உள்ளனர். இன்றைய போட்டியிலும் குல்தீப்- சாஹல் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்ஆப்பிரிக்க மண்ணில் இந்தியா இதுவரை ஒருநாள் போட்டி தொடரை வென்றதில்லை. முதல் முறையாக தொடரை வெல்ல இந்தியா நல்ல வாய்ப்பு உள்ளது. அதனை இந்திய வீரர்கள் சரியாக பயன்படுத்தி கொள்வார்கள்.
வீரர்கள் காயம்...
தென்ஆப்பிரிக்கா அணி தனது சொந்த மண்ணில் திணறி வருகிறது. கேப்டன் டுபெலிசிஸ், டிவில்லியர்ஸ் ஆகியோர் காயத்தால் விலகியது பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது டிவில்சியர்ஸ் திரும்பி இருப்பது அந்த அணிக்கு ஆறுதல் தரக்கூடிய விஷயமாகும். ஆனாலும் முன்னணி பேட்ஸ் மேன்களான ஹசிம் ஆம்லா, டுமிஸ், மார்கிராம், டேவிட் மில்லர் ஆகியோர் ரன் குவிக்க திணறி வருகிறார்கள். குல்தீப்-சாஹல் சுழற்பந்து வீச்சை சமாளித்து எப்படி ரன் எடுப்பது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள். பந்து வீச்சில் கிறிஸ்மோரிஸ், ரபடா, இம்ரான்தாகீர், நிகிடி ஆகியோர் இருந்தாலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
தொடரை இழக்கும்...
ஏற்கனவே ஹாட்ரிக் தோல்வி சந்தித்துள்ள தென்ஆப்பிரிக்கா இன்றைய போட்டியிலும் தோற்றால் தொடரை இழக்கும். தொடரை சமன் செய்ய எஞ்சியுள்ள 3 போட்டியிலும் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் தென் ஆப்பிரிக்கா உள்ளது. இதனால் வெற்றிக்காக கடுமையாக போராடும். இரு அணிகளும் இன்று மோதுவது 81-வது போட்டியாகும். இதுவரை நடந்த 80 ஒருநாள் போட்டியில் இந்தியா 32-ல், தென்ஆப்பிரிக்கா 45-ல் வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டி முடிவு இல்லை.
இந்திய வீரர்கள்: விராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, தவான், கேதர்ஜாதவ், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, ரகானே, ஹர்த்திக் பாண்ட்யா, யசுவேந்திர சஹால், குல்தீப் யாதவ், முகமது ஷமி, புவனேஷ்வர்குமார், பும்ரா, அக்ஷர் பட்டேல், ஷர்துல் தாக்கூர்.
தென்ஆப்பிரிக்கா: மார்க்ராம் (கேப்டன்), அம்லா, டிவில்லியர்ஸ், டுமினி, இம்ரான் தாகீர், டேவிட் மில்லர், மோர்னே மோர்கல், கிறிஸ் மோரிஸ், நிகிடி, பெலக்வாயோ, ரபடா, ஷம்சி, ஜோன்டோ, பெஹர்டைன், ஹென்ரிச் கிளாசென்.
முதல் கேப்டன் கோலி...?
இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்கா மண்ணில் இதுவரை ஒருநாள் போட்டி தொடரை வென்றது கிடையாது. தென்ஆப்பிரிக்க மண்ணில் 4 முறை ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்று உள்ளது. இதில் 4 முறையும் தொடரை இழந்தே இருக்கிறது. 1992-ம் ஆண்டு அசாருதீன் தலைமையிலான இந்திய அணி 5-2 என்ற கணக்கிலும், 2006-ம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையிலான அணி 5 போட்டி கொண்ட தொடரை 4-0 என்ற கணக்கிலும் இழந்தது. டோனி தலைமையில் 2010-ம் ஆண்டு 3-2 (5 போட்டி), 2013-ம் ஆண்டு 2-0 (3 போட்டி) என்ற கணக்கிலும் தொடரை இழந்தது.
இன்றைய போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் தென்ஆப்பிரிக்காவில் ஒருநாள் போட்டி தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் பெருமையை கோலி பெறுவார். மேலும் ஒருநாள் போட்டி தர வரிசையில் தென்ஆப்பிரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா முதல் இடத்தை பிடிக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி6 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 5 hours ago |
ரவா பர்பி1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து: சந்திரசேகர ராவ் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
17 Apr 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக வந்த புகாரையடுத்து சந்திரசேகரராவ் இன்று தனது நிலைப்பாட்டை விளக்குமாறு தேர்தல் ஆணையம்
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
சிறையில் இருந்தே ஆட்சி செய்ய கெஜ்ரிவாலை அனுமதிக்க வேண்டும் : டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி மனு
17 Apr 2024புதுடெல்லி : சிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி கட்சி மனுத்தாக்கல் செய்துள்ளது.
-
கோவையில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்திக் வாக்கு சேகரிப்பு
17 Apr 2024கோவை : கோவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
பிரசாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு: நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி
17 Apr 2024வேலூர் : பிரச்சாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நடிகர் மன்சூர் அலிகான் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
150 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க வெற்றி பெறாது : ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி
17 Apr 2024காசியாபாத் : மக்களவை தேர்தலில் 150 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க.விற்கு வெற்றி கிடைக்காது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
உங்கள் ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் புதிய இணையதளம் : ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது
17 Apr 2024புது டெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்த பணிகளை முன்னிலைப்படுத்தும் விதமாக உங்கள் ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் புதிய இணையதளத்தை ஆம் ஆத்மி கட்சி நேற்ற
-
வெற்றி பெறுவோம் என்ற உறுதியுடன் வந்துள்ளேன் : அசாமில் பிரதமர் மோடி பிரசாரம்
17 Apr 2024கவுகாத்தி : 2014ம் ஆண்டு எதிர்பார்ப்புடன் மக்களை சந்திக்க வந்தேன், தற்போது வெற்றிபெறுவோம் என்ற உறுதியுடன் வந்துள்ளேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
60 ஆண்டுகளில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் : அசாமில் பிரதமர் மோடி பெருமிதம்
17 Apr 2024அசாம் : காங்கிரஸ் கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்புக்காக உழைத்தேன்.