எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், உணவு தானிய உற்பத்தியை தன்னிறைவு அடைய செயல்படுத்தப்படும் திட்டமான உணவு தானிய உற்பத்தி இயக்கம் தொடர்பாக, வேளாண்மை இயக்குநர் லி.தஷ்ணாமூர்த்தி, தலைமையில், கலெக்டர் இல.சுப்பிரமணியன், முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
ஆய்வுக்கூட்டம்
இக்கூட்டத்தில் உணவு தானிய உற்பத்தி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தமிழக அளவில் 100 இலட்சம் மெ.டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வேளாண் தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்துதல், விதைகள் மற்றும் உரங்கள் ஆகிய இடுபொருட்களை பயன்படுத்துதல், பயிர் சாகுபடி பரப்பை அதிகரித்தல், உற்பத்தித் திறனை உயர்த்தி உற்பத்தியினை அதிகரித்தல் ஆகியவைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.விழுப்புரம் மாவட்டத்தில் நெல் பயிர் சாகுபடி பரப்பு இலக்கான 156100 எக்டேரில், இதுவரை 159681 எக்டேர் பரப்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் 15100 எக்டேர் பரப்பில் நடப்பு நவரை பருவத்தில் சாகுபடிக்கு கொண்டு வரப்படும் எனவும், இதன்மூலம் நடப்பாண்டில் 174781 எக்டேர் சாகுபடிக்கு கொண்டுவரப்பட்டு 8.32 லட்சம் மெ.டன் அரிசி உற்பத்தி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.மேலும், சிறுதானியங்கள் மற்றும் மக்காச்சோளப் பயிர்களில் நடப்பாண்டு 61632 எக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ளதன் மூலம் 3.314 இலட்சம் மெ.டன் உற்பத்தி செய்யப்படும் எனவும், பயறுவகை பயிர்களில் 87700 எக்டேர் பரப்பில் விழுப்புரம் மாவட்டத்தில் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டு, இதுவரை சுமார் ஒரு லட்சம் எக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது எனவும், இதன் மூலம் 89600 மெ.டன் பயறுவகைகள் உற்பத்தி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் தமிழக அளவிலான உணவு உற்பத்தி இலக்கான 100 இலட்சம் மெ.டன் உற்பத்தியில் 12.5 இலட்சம் மெ.டன் சாதனை அடைய திட்டமிடப்பட்டுள்ளது. இது மாநில உற்பத்தியில் 12.5 சதவீத பங்களிப்பாகும் என கலெக்டர் இல.சுப்பிரமணியன், தெரிவித்தார்.இதுவரை உணவு தானிய பயிர்களின் சாகுபடி பரப்பு, உற்பத்தி திறன், உற்பத்தி குறித்து வேளாண்மை இயக்குநர் ஆய்வு செய்து, நவீன தொழில்நுட்பங்களை கையாளுதல், சிக்கன நீர்பாசனம், சீரிய இடுபொருட்களை பயன்படுத்துதல், நெல் வரப்பில் பயறு சாகுபடி செய்தல், கரும்பில் ஊடுபயிர் செய்தல் போன்ற உத்திகளை கையாள வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கு வேளாண்மை இயக்குநர் தஷ்ணாமூர்த்தி, அறிவுரை வழங்கினார்.முன்னதாக, விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள திரவ உயிர் உர உற்பத்தி மையத்தில் உற்பத்தியினை துவக்கி வைத்து, பார்வையிட்டார்கள். தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட வேளாண்மைத்துறை சார்பாக 13 பயனாளிகளுக்கு அரசு மானியத்தில் பவர் டில்லர்கள், ரொட்டாவேட்டர்கள், பாசனகுழாய்கள், விசைத்தெளிப்பான்கள், மழைத்தூவுவான்கள், சூரிய ஒளி விளக்குப்பொறி ஆகியவற்றை வழங்கினார்கள்.தொடர்ந்து, முகையூர் வட்டம் டி.கீரனூர் ஊராட்சியில், நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் மழைத்தூவுவான் மூலம் பாசனம் செய்யப்பட்டுள்ள மணிலா பயிரையும், வேங்கூர் ஊராட்சியில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் பயிரிடப்பட்டுள்ள கிழங்கு வகை மலைப்பயிர் - சம்மங்கி பயிரினையும், பன்னாரி அம்மன் சுகர்ஸ் லிமிடெட்., யூனிட் சர்க்கரை ஆலையில் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள நிழல்வலைக்கூடம் மற்றும் கரும்பு நாற்று உற்பத்தியினையும் வேளாண் இயக்குநர் தஷ்ணாமூர்த்தி, மற்றும் கலெக்டர் இல.சுப்பிரமணியன், பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இந்நிகழ்ச்சிகளில், திருக்கோவிலூர் சார் ஆட்சியர் சாருஸ்ரீ, கூடுதல் வேளாண்மை இயக்குநர் சங்கரலிங்கம், வேளாண்மை இணை இயக்குநர் கி.செல்வராஜ், வேளாண்மை துணை இயக்குநர்கள் சண்முகம், மோகன்தாஸ், மு.செல்வராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) செல்வசேகர், வேளாண் அலுவலர் பி.சுரேஷ், வேளாண்மை உதவி இயக்குநர்கள் சுப்பிரமணியன், கருணாநிதி, கனகலிங்கம் மற்றும் விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளுர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் சேலம் மாவட்ட வேளாண்மைத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.